Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫

Qur'an Surah Al-Kahf Verse 5

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَّا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَاۤىِٕهِمْۗ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْۗ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا (الكهف : ١٨)

mā lahum
مَّا لَهُم
Not they have
அவர்களுக்கு இல்லை
bihi
بِهِۦ
about it
அவனைப் பற்றி
min ʿil'min
مِنْ عِلْمٍ
any knowledge
எந்த அறிவும்
walā
وَلَا
and not
இன்னும் இல்லை
liābāihim
لِءَابَآئِهِمْۚ
their forefathers
அவர்களுடைய மூதாதைகளுக்கு
kaburat
كَبُرَتْ
Mighty (is)
பெரும் பாவமாகி விட்டது
kalimatan
كَلِمَةً
the word
சொல்
takhruju
تَخْرُجُ
(that) comes out
வெளிப்படும்
min afwāhihim
مِنْ أَفْوَٰهِهِمْۚ
of their mouths
வாய்களிலிருந்து அவர்களின்
in yaqūlūna
إِن يَقُولُونَ
Not they say
அவர்கள் கூறுவதில்லை
illā kadhiban
إِلَّا كَذِبًا
except a lie
தவிர/பொய்யை

Transliteration:

Maa lahum bihee min 'ilminw wa laa li aabaaa'ihim; kaburat kalimatan takhruju min afwaahihim; iny yaqooloona illaa kazibaa (QS. al-Kahf:5)

English Sahih International:

They have no knowledge of it, nor had their fathers. Grave is the word that comes out of their mouths; they speak not except a lie. (QS. Al-Kahf, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கும் சரி; அவர்களுடைய மூதாதைகளுக்கும் சரி. இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையேயன்றி (இவ்வாறு) இவர்கள் கூறவில்லை. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௫)

Jan Trust Foundation

அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனைப் பற்றி எந்த அறிவும் அவர்களுக்கும் இல்லை, அவர்களுடைய மூதாதைகளுக்கும் இல்லை. அவர்களின் வாய்களிலிருந்து வெளிப்படும் (இந்த) சொல் பெரும் பாவமாகிவிட்டது. (இது மகா அபத்தமான சொல்லாகும்.) அவர்கள் பொய்யைத் தவிர கூறுவதில்லை.