Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௯

Qur'an Surah Al-Kahf Verse 29

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقُلِ الْحَقُّ مِنْ رَّبِّكُمْۗ فَمَنْ شَاۤءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَاۤءَ فَلْيَكْفُرْۚ اِنَّآ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًاۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَاۗ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَاۤءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَۗ بِئْسَ الشَّرَابُۗ وَسَاۤءَتْ مُرْتَفَقًا (الكهف : ١٨)

waquli
وَقُلِ
And say
இன்னும் கூறுவீராக
l-ḥaqu
ٱلْحَقُّ
"The truth
உண்மை
min rabbikum
مِن رَّبِّكُمْۖ
(is) from your Lord
உங்கள் இறைவனிடமிருந்து
faman shāa
فَمَن شَآءَ
so whoever wills -
எவர்/விரும்பினார்
falyu'min
فَلْيُؤْمِن
let him believe
நம்பிக்கை கொள்ளலாம்
waman
وَمَن
and whoever
இன்னும் எவர்
shāa
شَآءَ
wills -
விரும்பினார்
falyakfur
فَلْيَكْفُرْۚ
let him disbelieve"
நிராகரித்து விடலாம்
innā
إِنَّآ
Indeed We
நிச்சயமாக நாம்
aʿtadnā
أَعْتَدْنَا
have prepared
ஏற்படுத்தியுள்ளோம்
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
for the wrongdoers
தீயவர்களுக்கு
nāran
نَارًا
a Fire
நரக நெருப்பை
aḥāṭa
أَحَاطَ
will surround
சூழ்ந்துள்ளது
bihim
بِهِمْ
them
அவர்களை
surādiquhā
سُرَادِقُهَاۚ
its walls
அதன் சுவர்
wa-in yastaghīthū
وَإِن يَسْتَغِيثُوا۟
And if they call for relief
அவர்கள் உதவி தேடினால்
yughāthū
يُغَاثُوا۟
they will be relieved
உதவப்படுவார்கள்
bimāin
بِمَآءٍ
with water
நீரைக் கொண்டு
kal-muh'li
كَٱلْمُهْلِ
like molten brass
முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்ற
yashwī
يَشْوِى
(which) scalds
பொசுக்கக் கூடியது
l-wujūha
ٱلْوُجُوهَۚ
the faces
முகங்களை
bi'sa
بِئْسَ
Wretched
மகா கெட்டது
l-sharābu
ٱلشَّرَابُ
(is) the drink
பானம்
wasāat
وَسَآءَتْ
and evil
இன்னும் அது தீயது
mur'tafaqan
مُرْتَفَقًا
(is) the resting place
ஓய்விடம்

Transliteration:

Wa qulil haqqu mir Rabbikum faman shaaa'a falyu minw wa man shaaa'a falyakfur; innaaa a'tadnaa lizzaalimeena Naaran ahaata bihim suraadiquhaa; wa iny yastagheesoo yaghaasoo bimaaa'in kalmuhli yashwil wujooh' bi'sash-sharaab; wa saaa'at murtafaqaa (QS. al-Kahf:29)

English Sahih International:

And say, "The truth is from your Lord, so whoever wills – let him believe; and whoever wills – let him disbelieve." Indeed, We have prepared for the wrongdoers a fire whose walls will surround them. And if they call for relief, they will be relieved with water like murky oil, which scalds [their] faces. Wretched is the drink, and evil is the resting place. (QS. Al-Kahf, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால்) நமக்கொன்றும் நஷ்டமில்லை. (ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜுவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதனைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கெட்டது. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௨௯)

Jan Trust Foundation

(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக| “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான இந்த வேதம்) வந்துவிட்டது. விரும்பியவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளலாம். விரும்பியவர்கள் (இதை) நிராகரித்து விடலாம். நிச்சயமாக நாம் (இதை நிராகரிக்கின்ற) தீயவர்களுக்கு நரக நெருப்பை ஏற்படுத்தியுள்ளோம். அதன் சுவர் அவர்களை சூழ்ந்துள்ளது. அவர்கள் உதவி தேடினால் முகங்களை பொசுக்கக்கூடிய முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்ற நீரைக் கொண்டே உதவப்படுவார்கள். (அது ஒரு) மகா கெட்ட பானம். அது ஒரு தீய ஓய்விடம் (சாயுமிடம்) ஆகும்.