Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௧

Qur'an Surah Al-Kahf Verse 21

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوْٓا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَاۚ اِذْ يَتَنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًاۗ رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْۗ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا (الكهف : ١٨)

wakadhālika
وَكَذَٰلِكَ
And similarly
அவ்வாறே
aʿtharnā
أَعْثَرْنَا
We made known
காண்பித்தோம்
ʿalayhim
عَلَيْهِمْ
about them
அவர்களை
liyaʿlamū
لِيَعْلَمُوٓا۟
that they might know
அவர்கள் அறிவதற்காக
anna
أَنَّ
that
நிச்சயம்
waʿda
وَعْدَ
(the) Promise
வாக்கு
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ḥaqqun
حَقٌّ
(is) true
உண்மை
wa-anna
وَأَنَّ
and that
இன்னும் நிச்சயம்
l-sāʿata
ٱلسَّاعَةَ
(about) the Hour
மறுமை
lā rayba
لَا رَيْبَ
(there is) no doubt
அறவே சந்தேகம் இல்லை
fīhā
فِيهَآ
in it
அதில்
idh yatanāzaʿūna
إِذْ يَتَنَٰزَعُونَ
When they disputed
போது/தர்க்கிப்பார்கள்
baynahum
بَيْنَهُمْ
among themselves
தங்களுக்கிடையில்
amrahum
أَمْرَهُمْۖ
about their affair
தங்கள் விஷயத்தில்
faqālū
فَقَالُوا۟
and they said
கூறினர்
ib'nū
ٱبْنُوا۟
"Construct
எழுப்புங்கள், கட்டுங்கள்
ʿalayhim
عَلَيْهِم
over them
அவர்களுக்கருகில்
bun'yānan
بُنْيَٰنًاۖ
a structure
ஒரு கட்டடத்தை
rabbuhum
رَّبُّهُمْ
Their Lord
அவர்களின் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
knows best
மிக அறிந்தவன்
bihim
بِهِمْۚ
about them"
அவர்களை
qāla
قَالَ
Said
கூறினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ghalabū
غَلَبُوا۟
prevailed
மிகைத்தனர்
ʿalā amrihim
عَلَىٰٓ أَمْرِهِمْ
in their matter
அவர்களின் விஷயத்தில்
lanattakhidhanna
لَنَتَّخِذَنَّ
"Surely we will take
நிச்சயம்ஆக்குவோம்
ʿalayhim
عَلَيْهِم
over them
அவர்களுக்கருகில்
masjidan
مَّسْجِدًا
a place of worship"
ஒரு தொழுமிடத்தை

Transliteration:

Wa kazaalika a'sarnaa 'alaihim liya'lamooo anna wa'dal laahi haqqunw wa annas Saa'ata laa raiba feehaa iz yatanaaza'oona bainahum amrahum faqaalub noo 'alaihim bunyaanaa; Rabbuhum a'lamu bihim; qaalal lazeena ghalaboo 'alaaa amrihim lanat takhizanna 'alaihim masjidaa (QS. al-Kahf:21)

English Sahih International:

And similarly, We caused them to be found that they [who found them] would know that the promise of Allah is truth and that of the Hour there is no doubt. [That was] when they disputed among themselves about their affair and [then] said, "Construct over them a structure. Their Lord is most knowing about them." Said those who prevailed in the matter, "We will surely take [for ourselves] over them a masjid." (QS. Al-Kahf, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனாகிய) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டினவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) "இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்" என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் "இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளியை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்" என்றார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௨௧)

Jan Trust Foundation

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்| “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் (மறுமைப் பற்றிய) விஷயத்தில் தங்களுக்கிடையில் தர்க்கித்த போது, நிச்சயம் அல்லாஹ்வின் வாக்கு உண்மை, நிச்சயம் மறுமை அ(து நிகழ்வ)தில் அறவே சந்தேகம் இல்லை என்று அவர்கள் அறிவதற்காக (அக்குகைவாசிகளை எழுப்பிய) அவ்வாறே, அவர்களை (அம்மக்களுக்கு) காண்பித்தோம். (அம்மக்கள்), அவர்களுக்கருகில் ஒரு கட்டடத்தை எழுப்புங்கள் என்று கூறினர். அவர்களின் இறைவன் அவர்களை மிக அறிந்தவன். அந்த வாலிபர்களின் விஷயத்தில் மிகைத்தவர்கள் கூறினர், “நிச்சயம் அவர்களுக்கருகில் ஒரு தொழுமிடத்தை (மஸ்ஜிதை) ஆக்குவோம்.”