Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௪

Qur'an Surah Al-Kahf Verse 14

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ اِذْ قَامُوْا فَقَالُوْا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَنْ نَّدْعُوَا۟ مِنْ دُوْنِهٖٓ اِلٰهًا لَّقَدْ قُلْنَآ اِذًا شَطَطًا (الكهف : ١٨)

warabaṭnā
وَرَبَطْنَا
And We made firm
இன்னும் உறுதிபடுத்தினோம்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
[on] their hearts
அவர்களுடைய உள்ளங்களை
idh qāmū
إِذْ قَامُوا۟
when they stood up
போது/நின்றனர்
faqālū
فَقَالُوا۟
and said
இன்னும் கூறினர்
rabbunā
رَبُّنَا
"Our Lord
எங்கள் இறைவன்
rabbu
رَبُّ
(is) the Lord
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமி
lan nadʿuwā
لَن نَّدْعُوَا۟
Never we will invoke
அழைக்கவே மாட்டோம்
min dūnihi
مِن دُونِهِۦٓ
besides Him besides Him
அவனையன்றி
ilāhan
إِلَٰهًاۖ
any god
(வேறு) ஒரு கடவுளை
laqad qul'nā
لَّقَدْ قُلْنَآ
Certainly we would have said
திட்டமாக கூறி விடுவோம்
idhan
إِذًا
then
அப்போது
shaṭaṭan
شَطَطًا
an enormity
எல்லை மீறிய பொய்யை

Transliteration:

Wa rabatnaa 'alaa quloo bihim iz qaamoo faqaaloo Rabbunaa Rabbus samaawaati wal ardi lan nad'uwa min dooniheee ilaahal laqad qulnaaa izan shatataa (QS. al-Kahf:14)

English Sahih International:

And We bound [i.e., made firm] their hearts when they stood up and said, "Our Lord is the Lord of the heavens and the earth. Never will we invoke besides Him any deity. We would have certainly spoken, then, an excessive transgression. (QS. Al-Kahf, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று "வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனையன்றி (வேறொருவரையும் வணக்கத்திற்குரியவன் என)நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்" என்றார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௪)

Jan Trust Foundation

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (தங்கள் சமுதாயத்தின் முன்) நின்று “எங்கள் இறைவன்தான் வானங்கள் இன்னும் பூமியின் இறைவன். அவனையன்றி வேறு ஒரு கடவுளை அழைக்கவே மாட்டோம். (அவ்வாறு அழைத்து விட்டால்) அப்போது, (அநியாயமான) எல்லை மீறிய பொய்யை திட்டவட்டமாக கூறி விடுவோம்”என்று கூறியபோது அவர்களுடைய உள்ளங்களை உறுதிபடுத்தினோம்.