Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௩௩

Qur'an Surah Al-Isra Verse 33

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِيْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّۗ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى الْقَتْلِۗ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا (الإسراء : ١٧)

walā taqtulū
وَلَا تَقْتُلُوا۟
And (do) not kill
கொல்லாதீர்கள்
l-nafsa
ٱلنَّفْسَ
the soul
உயிரை
allatī
ٱلَّتِى
which
எது
ḥarrama
حَرَّمَ
Allah has forbidden
தடுத்தான், புனிதமாக்கினான்
l-lahu
ٱللَّهُ
Allah has forbidden
அல்லாஹ்
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّۗ
except by right
உரிமையின்றி
waman
وَمَن
And whoever
எவர்
qutila
قُتِلَ
(is) killed
கொல்லப்பட்டார்
maẓlūman
مَظْلُومًا
wrongfully
அநீதி செய்யப்பட்டவராக
faqad jaʿalnā
فَقَدْ جَعَلْنَا
verily We have made
ஏற்படுத்தினோம்
liwaliyyihi
لِوَلِيِّهِۦ
for his heir
உறவினருக்கு/ அவருடைய
sul'ṭānan
سُلْطَٰنًا
an authority
அதிகாரத்தை
falā yus'rif
فَلَا يُسْرِف
but not he should exceed
ஆகவே, அவர் அளவு கடக்க வேண்டாம்
fī l-qatli
فِّى ٱلْقَتْلِۖ
in the killing
கொல்வதில்
innahu
إِنَّهُۥ
Indeed, he
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
is
இருக்கிறார்
manṣūran
مَنصُورًا
helped
உதவி செய்யப்பட்டவராக

Transliteration:

Wa laa taqtulun nafsal latee harramal laahu illaa bilhaqq; wa man qutila mazlooman faqad ja'alnaa liwaliyyihee sultaanan falaa yusrif fil qatli innahoo kaana mansooraa (QS. al-ʾIsrāʾ:33)

English Sahih International:

And do not kill the soul [i.e., person] which Allah has forbidden, except by right. And whoever is killed unjustly – We have given his heir authority, but let him not exceed limits in [the matter of] taking life. Indeed, he has been supported [by the law]. (QS. Al-Isra, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

(எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழி வாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து) விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப் பெறுவான். (அதாவது: பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.) (பனீ இஸ்ராயீல், வசனம் ௩௩)

Jan Trust Foundation

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை உரிமையின்றி கொல்லாதீர்கள். எவர் அநீதி செய்யப்பட்டவராக கொல்லப்பட்டாரோ, அவருடைய உறவினருக்கு அதிகாரத்தை நாம் ஏற்படுத்தினோம். ஆகவே அவர் (-அந்த உறவினர் பழிக்குப்பழி) கொல்வதில் அளவு கடக்க வேண்டாம். நிச்சயமாக அவர் உதவி செய்யப்பட்டவராக இருக்கிறார். (கொன்றவனை கொன்று பழிதீர்க்க அல்லது நஷ்டஈடு பெற கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்.)