Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௨௮

Qur'an Surah Al-Isra Verse 28

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاۤءَ رَحْمَةٍ مِّنْ رَّبِّكَ تَرْجُوْهَا فَقُلْ لَّهُمْ قَوْلًا مَّيْسُوْرًا (الإسراء : ١٧)

wa-immā tuʿ'riḍanna
وَإِمَّا تُعْرِضَنَّ
And if you turn away
நீ புறக்கணித்தால்
ʿanhumu
عَنْهُمُ
from them
அவர்களை
ib'tighāa
ٱبْتِغَآءَ
seeking
நாடி
raḥmatin
رَحْمَةٍ
mercy
ஓர் அருளை
min
مِّن
from
இருந்து
rabbika
رَّبِّكَ
your Lord
உம் இறைவன்
tarjūhā
تَرْجُوهَا
which you expect
ஆதரவு வைத்தவனாக/ அதை
faqul
فَقُل
then say
ஆகவே சொல்
lahum
لَّهُمْ
to them
அவர்களுக்கு
qawlan
قَوْلًا
a word
சொல்லை
maysūran
مَّيْسُورًا
gentle
மென்மையானது

Transliteration:

Wa immaa turidanna 'anhumub tighaaa'a rahmatim mir rabbika tarjoohaa faqul lahum qawlam maisooraa (QS. al-ʾIsrāʾ:28)

English Sahih International:

And if you [must] turn away from them [i.e., the needy] awaiting mercy from your Lord which you expect, then speak to them a gentle word. (QS. Al-Isra, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீங்கள் உங்கள் இறைவனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உங்களிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீங்கள் புறக்கணிக்கும்படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்கள்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுங்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௨௮)

Jan Trust Foundation

(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீ உம் இறைவனிடமிருந்து ஓர் அருளை நாடி அதை ஆதரவு வைத்தவனாகவும் இருக்க (அது உனக்கு கிடைக்கின்ற வரை, யாசித்து வருகின்ற) அவர்களை நீ புறக்கணித்தால், அவர்களுக்கு மென்மையான சொல்லைச் சொல்.