Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 6

Al-Isra

(al-ʾIsrāʾ)

௫௧

اَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِيْ صُدُوْرِكُمْ ۚفَسَيَقُوْلُوْنَ مَنْ يُّعِيْدُنَاۗ قُلِ الَّذِيْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍۗ فَسَيُنْغِضُوْنَ اِلَيْكَ رُءُوْسَهُمْ وَيَقُوْلُوْنَ مَتٰى هُوَۗ قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَرِيْبًا ٥١

aw
أَوْ
அல்லது
khalqan
خَلْقًا
ஒரு படைப்பாக
mimmā
مِّمَّا
உள்ளவற்றில்
yakburu
يَكْبُرُ
பெரியதாக
fī ṣudūrikum
فِى صُدُورِكُمْۚ
உங்கள் நெஞ்சங்களில்
fasayaqūlūna
فَسَيَقُولُونَ
அவர்கள் கூறட்டும்
man
مَن
யார்?
yuʿīdunā
يُعِيدُنَاۖ
மீட்பார்/எங்களை
quli
قُلِ
கூறுவீராக
alladhī
ٱلَّذِى
எவன்
faṭarakum
فَطَرَكُمْ
படைத்தான்/உங்களை
awwala
أَوَّلَ
முதல்
marratin
مَرَّةٍۚ
முறையாக
fasayun'ghiḍūna
فَسَيُنْغِضُونَ
ஆகவே ஆட்டுவார்கள்
ilayka
إِلَيْكَ
உம் பக்கம்
ruūsahum
رُءُوسَهُمْ
தலைகளை/தங்கள்
wayaqūlūna
وَيَقُولُونَ
பிறகு கூறுவார்கள்
matā
مَتَىٰ
எப்போது
huwa
هُوَۖ
அது
qul
قُلْ
கூறுவீராக
ʿasā
عَسَىٰٓ
கூடும்
an yakūna
أَن يَكُونَ
இருக்க
qarīban
قَرِيبًا
சமீபமாக
அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாகவாகிலும் ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் "எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?" என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)" என்று கூறுங்கள். அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து "அந்நாள் எப்பொழுது (வரும்)?" என்று கேட்பார்கள். அதற்கு நீங்கள் (அவர்களை நோக்கி "அது தூரத்தில் இல்லை) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்" என்று கூறுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௧)
Tafseer
௫௨

يَوْمَ يَدْعُوْكُمْ فَتَسْتَجِيْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِيْلًا ࣖ ٥٢

yawma yadʿūkum
يَوْمَ يَدْعُوكُمْ
நாள்/அழைப்பான்/உங்களை
fatastajībūna
فَتَسْتَجِيبُونَ
பதில் அளிப்பீர்கள்
biḥamdihi
بِحَمْدِهِۦ
புகழ்ந்து அவனுடைய
wataẓunnūna
وَتَظُنُّونَ
இன்னும் எண்ணுவீர்கள்
in labith'tum
إِن لَّبِثْتُمْ
நீங்கள் தங்கவில்லை
illā qalīlan
إِلَّا قَلِيلًا
தவிர/சொற்பமாக
(இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்துகொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப (நேர)மே அன்றி தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்! ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௨)
Tafseer
௫௩

وَقُلْ لِّعِبَادِيْ يَقُوْلُوا الَّتِيْ هِيَ اَحْسَنُۗ اِنَّ الشَّيْطٰنَ يَنْزَغُ بَيْنَهُمْۗ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا ٥٣

waqul
وَقُل
கூறுவீராக
liʿibādī
لِّعِبَادِى
என் அடியார்களுக்கு
yaqūlū
يَقُولُوا۟
அவர்கள் கூறவும்
allatī
ٱلَّتِى
எது
hiya
هِىَ
அது
aḥsanu
أَحْسَنُۚ
மிக அழகியது
inna
إِنَّ
நிச்சயமாக
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தான்
yanzaghu
يَنزَغُ
குழப்பம், கெடுதி செய்வான்
baynahum
بَيْنَهُمْۚ
அவர்களுக்கிடையில்
inna l-shayṭāna
إِنَّ ٱلشَّيْطَٰنَ
நிச்சயமாக ஷைத்தான்
kāna
كَانَ
இருக்கின்றான்
lil'insāni
لِلْإِنسَٰنِ
மனிதனுக்கு
ʿaduwwan
عَدُوًّا
எதிரியாக
mubīnan
مُّبِينًا
தெளிவான
(நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௩)
Tafseer
௫௪

رَبُّكُمْ اَعْلَمُ بِكُمْ اِنْ يَّشَأْ يَرْحَمْكُمْ اَوْ اِنْ يَّشَأْ يُعَذِّبْكُمْۗ وَمَآ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ وَكِيْلًا ٥٤

rabbukum
رَّبُّكُمْ
உங்கள் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bikum
بِكُمْۖ
உங்களை
in yasha
إِن يَشَأْ
அவன் நாடினால்
yarḥamkum aw
يَرْحَمْكُمْ أَوْ
அருள் புரிவான்/உங்களுக்கு/அல்லது
in yasha
إِن يَشَأْ
அவன் நாடினால்
yuʿadhib'kum
يُعَذِّبْكُمْۚ
வேதனை செய்வான்/ உங்களை
wamā arsalnāka
وَمَآ أَرْسَلْنَٰكَ
உம்மை நாம் அனுப்பவில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளராக
(மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) உங்களை அவர்களுக்குப் பொறுப்பாளியாக நாம் அனுப்பவில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௪)
Tafseer
௫௫

وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيّٖنَ عَلٰى بَعْضٍ وَّاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا ٥٥

warabbuka
وَرَبُّكَ
உம் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
biman
بِمَن
எவர்களை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமி
walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
faḍḍalnā
فَضَّلْنَا
மேன்மைப்படுத்தினோம்
baʿḍa l-nabiyīna
بَعْضَ ٱلنَّبِيِّۦنَ
சிலரை/நபிமார்களில்
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍۖ
சிலர் மீது
waātaynā
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
dāwūda zabūran
دَاوُۥدَ زَبُورًا
தாவூதுக்கு/ஜபூரை
வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கின்றது என்பதையும் உங்கள் இறைவன் நன்கறிவான். (நபியே! உங்களது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு "ஜபூர்" என்னும் வேதத்தைக் கொடுத்தோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௫)
Tafseer
௫௬

قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا يَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيْلًا ٥٦

quli
قُلِ
கூறுவீராக
id'ʿū
ٱدْعُوا۟
அழையுங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
zaʿamtum
زَعَمْتُم
கூறினீர்கள்
min dūnihi
مِّن دُونِهِۦ
அவனையன்றி
falā yamlikūna
فَلَا يَمْلِكُونَ
உரிமை, ஆற்றல் பெற மாட்டார்கள்
kashfa
كَشْفَ
நீக்குவதற்கு
l-ḍuri
ٱلضُّرِّ
துன்பத்தை
ʿankum
عَنكُمْ
உங்களை விட்டு
walā taḥwīlan
وَلَا تَحْوِيلًا
இன்னும் திருப்புவதற்கும்
(நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவைகளை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறழைத்தால்) அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதனைத்) தட்டிவிடவோ சக்தியற்றவை (என்பதை) அறிந்து கொள்வீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௬)
Tafseer
௫௭

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ يَدْعُوْنَ يَبْتَغُوْنَ اِلٰى رَبِّهِمُ الْوَسِيْلَةَ اَيُّهُمْ اَقْرَبُ وَيَرْجُوْنَ رَحْمَتَهٗ وَيَخَافُوْنَ عَذَابَهٗۗ اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا ٥٧

ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
yadʿūna
يَدْعُونَ
பிரார்த்திக்கிறார்கள்
yabtaghūna
يَبْتَغُونَ
தேடுகின்றனர்
ilā
إِلَىٰ
பக்கம்
rabbihimu
رَبِّهِمُ
தங்கள் இறைவன்
l-wasīlata
ٱلْوَسِيلَةَ
நன்மையை
ayyuhum
أَيُّهُمْ
தங்களில் யார்
aqrabu
أَقْرَبُ
மிக நெருங்கியவராக
wayarjūna
وَيَرْجُونَ
இன்னும் ஆதரவு வைக்கின்றனர்
raḥmatahu
رَحْمَتَهُۥ
அவனுடையஅருளை
wayakhāfūna
وَيَخَافُونَ
இன்னும் பயப்படுகின்றனர்
ʿadhābahu
عَذَابَهُۥٓۚ
வேதனையை/அவனுடைய
inna
إِنَّ
நிச்சயமாக
ʿadhāba
عَذَابَ
வேதனை
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
kāna maḥdhūran
كَانَ مَحْذُورًا
இருக்கின்றது/பயப்படவேண்டியதாக
இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கின்றார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்க மானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர் பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கின்றார்கள். ஏனென்றால், நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக் கூடியதே! ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௭)
Tafseer
௫௮

وَاِنْ مِّنْ قَرْيَةٍ اِلَّا نَحْنُ مُهْلِكُوْهَا قَبْلَ يَوْمِ الْقِيٰمَةِ اَوْ مُعَذِّبُوْهَا عَذَابًا شَدِيْدًاۗ كَانَ ذٰلِكَ فىِ الْكِتٰبِ مَسْطُوْرًا ٥٨

wa-in min
وَإِن مِّن
அறவே இல்லை
qaryatin
قَرْيَةٍ
ஊர்
illā
إِلَّا
தவிர
naḥnu
نَحْنُ
நாம்
muh'likūhā
مُهْلِكُوهَا
அதை அழிப்பவர்களாக
qabla
قَبْلَ
முன்பு
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளுக்கு
aw
أَوْ
அல்லது
muʿadhibūhā
مُعَذِّبُوهَا
வேதனை செய்பவர்களாக/அதை
ʿadhāban
عَذَابًا
வேதனை
shadīdan
شَدِيدًاۚ
கடுமையானது
kāna
كَانَ
இருக்கின்றது
dhālika
ذَٰلِكَ
இது
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
புத்தகத்தில்
masṭūran
مَسْطُورًا
எழுதப்பட்டதாக
(அநியாயக்காரர்கள் வசிக்கும்) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்துவிடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) "லவ்ஹுல் மஹ்ஃபூளி"ல் வரையப்பட்டுவிட்டது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௮)
Tafseer
௫௯

وَمَا مَنَعَنَآ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّآ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَۗ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَاۗ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا ٥٩

wamā manaʿanā
وَمَا مَنَعَنَآ
தடுக்கவில்லை/நம்மை
an nur'sila
أَن نُّرْسِلَ
நாம் அனுப்பிவைக்க
bil-āyāti
بِٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
illā
إِلَّآ
தவிர
an kadhaba
أَن كَذَّبَ
பொய்ப்பித்தார்(கள்)
bihā
بِهَا
அவற்றை
l-awalūna
ٱلْأَوَّلُونَۚ
முன்னோர்
waātaynā
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
thamūda
ثَمُودَ
ஸமூதுக்கு
l-nāqata
ٱلنَّاقَةَ
பெண் ஒட்டகத்தை
mub'ṣiratan
مُبْصِرَةً
தெளிவான அத்தாட்சியாக
faẓalamū
فَظَلَمُوا۟
தீங்கிழைத்தனர்
bihā
بِهَاۚ
அதற்கு
wamā nur'silu
وَمَا نُرْسِلُ
அனுப்ப மாட்டோம்
bil-āyāti
بِٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
illā takhwīfan
إِلَّا تَخْوِيفًا
தவிர/ பயமுறுத்தலாகவே
(நாம் அனுப்பிய அத்தாட்சிகளை) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (அவர்கள் விரும்பியவாறு நாம் கொடுத்த அத்தாட்சிகளையும் அவர்களே) பொய்யாக்கி விட்டனர் என்ற காரணத்தைத் தவிர, (இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்பி வைக்க வேறொன்றும் தடையாக இல்லை. (இதற்கு முன்னர்) "ஸமூது" என்னும் மக்களுக்கு (அவர்கள் விரும்பியவாறே) ஒரு பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ வரம்பு மீறி அதற்குத் தீங்கிழைத்து விட்டனர். (அவர்கள் விரும்புகின்ற) இத்தகைய அத்தாட்சிகளையெல்லாம் (அவர்களுக்குப்) பயமுறுத்தும் பொருட்டேயன்றி நாம் அனுப்புவதில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௯)
Tafseer
௬௦

وَاِذْ قُلْنَا لَكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِۗ وَمَا جَعَلْنَا الرُّءْيَا الَّتِيْٓ اَرَيْنٰكَ اِلَّا فِتْنَةً لِّلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ فِى الْقُرْاٰنِ ۗ وَنُخَوِّفُهُمْۙ فَمَا يَزِيْدُهُمْ اِلَّا طُغْيَانًا كَبِيْرًا ࣖ ٦٠

wa-idh qul'nā
وَإِذْ قُلْنَا
நாம் கூறிய சமயம்
laka
لَكَ
உமக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
aḥāṭa
أَحَاطَ
சூழ்ந்து கொண்டான்
bil-nāsi
بِٱلنَّاسِۚ
மனிதர்களை
wamā jaʿalnā
وَمَا جَعَلْنَا
இன்னும் நாம்ஆக்கவில்லை
l-ru'yā allatī
ٱلرُّءْيَا ٱلَّتِىٓ
காட்சியை/எது
araynāka
أَرَيْنَٰكَ
உமக்குகாண்பித்தோம்
illā fit'natan
إِلَّا فِتْنَةً
தவிர/சோதனையாக
lilnnāsi
لِّلنَّاسِ
மனிதர்களுக்கு
wal-shajarata
وَٱلشَّجَرَةَ
இன்னும் மரத்தை
l-malʿūnata
ٱلْمَلْعُونَةَ
சபிக்கப்பட்டது
fī l-qur'āni
فِى ٱلْقُرْءَانِۚ
குர்ஆனில்
wanukhawwifuhum
وَنُخَوِّفُهُمْ
இன்னும் பயமுறுத்துகிறோம்/அவர்களை
famā
فَمَا
அதிகப்படுத்துவ தில்லை
yazīduhum
يَزِيدُهُمْ
அதிகப்படுத்துவ தில்லை அவர்களுக்கு
illā ṭugh'yānan
إِلَّا طُغْيَٰنًا
தவிர/அட்டூழியத்தை
kabīran
كَبِيرًا
பெரியது
(நபியே!) "உங்கள் இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்து கொண்டான். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது)" என்று நாம் உங்களுக்குக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காக வேயன்றி வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களுக்குப் பயமுறுத்துவது பின்னும் (பின்னும்) அவர்களுடைய பெரும் அட்டூழியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௦)
Tafseer