Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௫௨

Qur'an Surah Ibrahim Verse 52

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا بَلٰغٌ لِّلنَّاسِ وَلِيُنْذَرُوْا بِهٖ وَلِيَعْلَمُوْٓا اَنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّلِيَذَّكَّرَ اُولُوا الْاَلْبَابِ ࣖ (ابراهيم : ١٤)

hādhā balāghun
هَٰذَا بَلَٰغٌ
This (is) a Message
இது/எடுத்துச் சொல்லப்படும் செய்தி
lilnnāsi waliyundharū
لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟
for the mankind that they may be warned
மக்களுக்கு/இன்னும் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காக
bihi
بِهِۦ
with it
இதன் மூலம்
waliyaʿlamū
وَلِيَعْلَمُوٓا۟
and that they may know
இன்னும் அவர்கள் அறிவதற்காக
annamā huwa
أَنَّمَا هُوَ
that only He
அவன்தான்
ilāhun
إِلَٰهٌ
(is) One God
வணக்கத்திற்குரியவன்
wāḥidun
وَٰحِدٌ
(is) One God
ஒரே ஒருவன்
waliyadhakkara
وَلِيَذَّكَّرَ
and that may take heed
இன்னும் நல்லுபதேசம் பெறுவதற்காக
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
men (of) understanding
அறிவுடையவர்கள்

Transliteration:

Haaza balaaghul linnaasi wa liyunzaroo bihee wa liya'lamooo annamaa Huwa Illaahunw Waahidunw wa liyaz zakkara ulul albaab (QS. ʾIbrāhīm:52)

English Sahih International:

This [Quran] is notification for the people that they may be warned thereby and that they may know that He is but one God and that those of understanding will be reminded. (QS. Ibrahim, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் எச்சரிக்கப்பட்டு வணக்கத்திற்குரியவன் ஒரே இறைவன்தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்கும், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்கும் (குர்ஆனாகிய) இது (அல்லாஹ்வின் கட்டளைகள் பொதிந்த) ஓர் அறிக்கையாகும். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௫௨)

Jan Trust Foundation

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இ(வ்வேதமான)து மக்களுக்கொரு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; அவன் ஒரே ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு இறக்கினான்).பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...