Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௫

Qur'an Surah Ibrahim Verse 45

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّسَكَنْتُمْ فِيْ مَسٰكِنِ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْاَمْثَالَ (ابراهيم : ١٤)

wasakantum
وَسَكَنتُمْ
And you dwelt
இன்னும் வசித்தீர்கள்
fī masākini
فِى مَسَٰكِنِ
in the dwellings
வசிப்பிடங்களில்
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்கள்
ẓalamū
ظَلَمُوٓا۟
wronged
தீங்கிழைத்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தமக்குத்தாமே
watabayyana
وَتَبَيَّنَ
and it had become clear
இன்னும் தெளிவானது
lakum kayfa
لَكُمْ كَيْفَ
to you how
உங்களுக்கு/எப்படி
faʿalnā
فَعَلْنَا
We dealt
நாம் செய்தோம்
bihim
بِهِمْ
with them
அவர்களுக்கு
waḍarabnā
وَضَرَبْنَا
and We put forth
இன்னும் விவரித்தோம்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-amthāla
ٱلْأَمْثَالَ
the examples"
உதாரணங்களை

Transliteration:

Wa sakantum fee masaakinil lazeena zalamooo anfusahum wa tabaiyana lakum kaifa fa'alnaa bihim wa darabnaa lakumul amsaal (QS. ʾIbrāhīm:45)

English Sahih International:

And you lived among the dwellings of those who wronged themselves, and it had become clear to you how We dealt with them. And We presented for you [many] examples." (QS. Ibrahim, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

அன்றி "தமக்குத்தாமே தீங்கிழைத்து(க் கொண்டு அழிந்து போனவர்கள்) வசித்திருந்த இடத்தில் நீங்களும் வசித்திருக்க வில்லையா? (என்றும்), நாம் அவர்களை என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவில்லையா? (இதனைப் பற்றி) உங்களுக்குப் பல உதாரணங்களையும் நாம் எடுத்துக் கூற வில்லையா" (என்றும் பதில் கூறுவான்.) (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௫)

Jan Trust Foundation

அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்கு தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“தமக்குத்தாமே தீங்கிழைத்தவர்களுடைய வசிப்பிடங்களில் (நீங்களும்) வசித்தீர்கள் (அல்லவா)? நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக இருந்தது. உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.”