Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௩௩

Qur'an Surah Ar-Ra'd Verse 33

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَنْ هُوَ قَاۤىِٕمٌ عَلٰى كُلِّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْۚ وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ ۗ قُلْ سَمُّوْهُمْۗ اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا يَعْلَمُ فِى الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ۗبَلْ زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِيْلِ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ (الرعد : ١٣)

afaman
أَفَمَنْ
Is then He Who
யார்?
huwa
هُوَ
(He)
அவன்
qāimun
قَآئِمٌ
(is) a Maintainer
நிர்வகிப்பவன்
ʿalā
عَلَىٰ
of
மீது
kulli
كُلِّ
every
ஒவ்வொரு
nafsin
نَفْسٍۭ
soul
ஆன்மா
bimā kasabat
بِمَا كَسَبَتْۗ
for what it has earned?
அவை செய்தவற்றுக்கு
wajaʿalū
وَجَعَلُوا۟
Yet they ascribe
அவர்கள் ஏற்படுத்தினர்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்வுக்கு
shurakāa
شُرَكَآءَ
partners
இணைகளை
qul
قُلْ
Say
கூறுவீராக
sammūhum
سَمُّوهُمْۚ
"Name them
பெயரிடுங்கள் அவற்றுக்கு
am tunabbiūnahu
أَمْ تُنَبِّـُٔونَهُۥ
Or (do) you inform Him
அல்லது/அறிவிக்கிறீர்களா?/அவனுக்கு
bimā lā yaʿlamu
بِمَا لَا يَعْلَمُ
of what not He knows
அவன் அறியாததை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
am
أَم
or
அல்லது
biẓāhirin mina l-qawli
بِظَٰهِرٍ مِّنَ ٱلْقَوْلِۗ
of the apparent of the words?"
பொய்யான சொல்லை
bal
بَلْ
Nay
மாறாக
zuyyina
زُيِّنَ
(is) made fair-seeming
அலங்கரிக்கப்பட்டது
lilladhīna
لِلَّذِينَ
to those who
எவர்களுக்கு
kafarū
كَفَرُوا۟
disbelieve
நிராகரித்தனர்
makruhum
مَكْرُهُمْ
their plotting
சூழ்ச்சி அவர்களுடைய
waṣuddū
وَصُدُّوا۟
and they are hindered
இன்னும் தடுக்கப்பட்டனர்
ʿani l-sabīli
عَنِ ٱلسَّبِيلِۗ
from the Path
பாதையிலிருந்து
waman yuḍ'lili
وَمَن يُضْلِلِ
And whoever (by) Allah
எவரை/ வழிகெடுப்பான்
l-lahu
ٱللَّهُ
Allah lets go astray
அல்லாஹ்
famā lahu
فَمَا لَهُۥ
then not for him
அவருக்கு இல்லை
min hādin
مِنْ هَادٍ
any guide
நேர்வழிகாட்டுபவர் எவரும்

Transliteration:

Afaman Huwa qaaa'imun 'alaa kulli nafsim bimaa kasabat; wa ja'aloo illlaahi shurakaaa'a qul samoohum; am tunabbi'oona hoo bimaa laa ya'lamu fil ardi; am bizaahirim minal qawl; bal zuyyina lillazeena kafaroo makruhum wa suddoo 'anis sabeel; wa mai yudlilil laaahu famaa lahoo min haad; (QS. ar-Raʿd:33)

English Sahih International:

Then is He who is a maintainer of every soul, [knowing] what it has earned, [like any other]? But to Allah they have attributed partners. Say, "Name them. Or do you inform Him of that which He knows not upon the earth or of what is apparent [i.e., alleged] of speech?" Rather, their [own] plan has been made attractive to those who disbelieve, and they have been averted from the way. And whomever Allah sends astray – there will be for him no guide. (QS. Ar-Ra'd, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

அவனோ, ஒவ்வொரு ஆத்மாவும் செய்யும் ஒவ்வொன் றையும் நன்கறிந்தவன். அவர்களோ (பொய்யான தெய்வங்களை) அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர்! (இத்தகைய குற்றவாளி களைத் தண்டிக்காது விட்டுவிடுவானா? நபியே! நீங்கள் அவர்களை நோக்கி, "நீங்கள் கூறும் தெய்வங்கள் மெய்யாகவே அவனுக்கு இணையானவையாக இருந்தால்,) அவற்றின் பெயரை நீங்கள் கூறுங்கள் அல்லது பூமியில் (அவனுக்கு இணையான ஒன்றிருந்து அதனை) அவன் அறியாது போய் அதைப்பற்றி அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது, உண்மையில்லாத) வெறும் வார்த்தைகள் தாமா?" என்று கேளுங்கள். இவைகளில் ஒன்றுமில்லை! இந்நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகளே அழகாகக் காண்பிக்கப் பெற்றுவிட்டன. (ஆதலால்தான் அவர்கள்) நேரான வழியிலிருந்தும் தடுக்கப்பட்டுவிட்டனர். எவர்களை (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் ஒருவருமில்லை. (ஸூரத்துர் ரஃது, வசனம் ௩௩)

Jan Trust Foundation

ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்| “அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?” என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன; நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுக்கிறானோ அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வொரு ஆன்மாவும் அவை செய்தவற்றுக்கு ஏற்ப அவற்றை நிர்வகிப்பவனா (எதையும் செய்ய சக்தியற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவான்)? அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர்! (நபியே!) கூறுவீராக! “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று பெயரிடமுடியுமா?) அல்லது பூமியில் அவன் அறியாததை அல்லது பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அதுவும் முடியாது.) மாறாக! நிராகரித்தவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சி அலங்கரிக்கப்பட்டது. (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை.