Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௩௦

Qur'an Surah Ar-Ra'd Verse 30

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِيْٓ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَآ اُمَمٌ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ الَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ وَهُمْ يَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِۗ قُلْ هُوَ رَبِّيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ مَتَابِ (الرعد : ١٣)

kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறே
arsalnāka
أَرْسَلْنَٰكَ
We have sent you
அனுப்பினோம்/உம்மை
fī ummatin
فِىٓ أُمَّةٍ
to a nation
ஒரு சமுதாயத்திடம்
qad khalat
قَدْ خَلَتْ
verily have passed away
சென்றிருக்கின்றன
min qablihā
مِن قَبْلِهَآ
from before it
இவர்களுக்கு முன்னரும்
umamun
أُمَمٌ
nations
பல சமுதாயங்கள்
litatluwā
لِّتَتْلُوَا۟
so that you might recite
நீர் ஓதுவதற்காக
ʿalayhimu
عَلَيْهِمُ
to them
இவர்கள் முன்
alladhī awḥaynā
ٱلَّذِىٓ أَوْحَيْنَآ
what We revealed
எது/நாம் வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
wahum
وَهُمْ
while they
இவர்களோ
yakfurūna
يَكْفُرُونَ
disbelieve
நிராகரிக்கின்றனர்
bil-raḥmāni
بِٱلرَّحْمَٰنِۚ
in the Most Gracious
ரஹ்மானை
qul
قُلْ
Say
கூறுவீராக
huwa
هُوَ
"He
அவன்தான்
rabbī
رَبِّى
(is) my Lord
என் இறைவன்
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
except
தவிர
huwa
هُوَ
Him
அவனை
ʿalayhi
عَلَيْهِ
Upon Him
அவன் மீது
tawakkaltu
تَوَكَّلْتُ
I put my trust
நம்பிக்கை வைத்தேன்
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
இன்னும் அவனிடமே
matābi
مَتَابِ
(is) my return"
என் பாவ மீட்சி

Transliteration:

Kazaalika arsalnaaka feee ummatin qad khalat min qablihaaa umamul litatluwa 'alaihimul lazeee awhainaaa ilaika wa hum yakfuroona bir Rahmaaan; qul Huwa Rabbee laaa ilaaha illaa Huwa Rabbee laaa ilaaha illaa Huwa 'alaihi tawakkaltu wa ilaihi mataab (QS. ar-Raʿd:30)

English Sahih International:

Thus have We sent you to a community before which [other] communities have passed on so you might recite to them that which We revealed to you, while they disbelieve in the Most Merciful. Say, "He is my Lord; there is no deity except Him. Upon Him I rely, and to Him is my return." (QS. Ar-Ra'd, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உங்களையும் நாம் (நம்முடைய தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் யாதொரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீங்கள் ஓதிக் காண்பித்து வாருங்கள். எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "அவன்தான் என்னுடைய இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவரு மில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்." (ஸூரத்துர் ரஃது, வசனம் ௩௦)

Jan Trust Foundation

(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்| “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது” என்று நீர் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! முன்பு தூதர்களை அனுப்பிய) இவ்வாறே, உம்மை (நம் தூதராக) ஒரு சமுதாயத்திடம் அனுப்பினோம். இவர்களுக்கு முன்னரும் பல சமதாயங்கள் சென்றிருக்கின்றன. நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை இவர்கள் முன் நீர் ஓதுவதற்காக (அவர்களிடம் உம்மை அனுப்பினோம்). இவர்களோ ரஹ்மானை (பேரருளாளன் அல்லாஹ்வை) நிராகரிக்கின்றனர். கூறுவீராக! “அவன்தான் என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் மீது நம்பிக்கை வைத்தேன். இன்னும் அவனிடமே என் பாவ மீட்சி இருக்கிறது.”