Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௧௪

Qur'an Surah Ar-Ra'd Verse 14

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهٗ دَعْوَةُ الْحَقِّۗ وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَجِيْبُوْنَ لَهُمْ بِشَيْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّيْهِ اِلَى الْمَاۤءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهٖۗ وَمَا دُعَاۤءُ الْكٰفِرِيْنَ اِلَّا فِيْ ضَلٰلٍ (الرعد : ١٣)

lahu
لَهُۥ
To Him
அவனுக்கே
daʿwatu
دَعْوَةُ
(is) supplication
பிரார்த்தனை
l-ḥaqi
ٱلْحَقِّۖ
(of) the truth
உண்மை
wa-alladhīna
وَٱلَّذِينَ
And those whom
எவர்கள்
yadʿūna
يَدْعُونَ
they invoke
அழைக்கிறார்கள்
min dūnihi
مِن دُونِهِۦ
besides Him besides Him
அவனையன்றி
lā yastajībūna
لَا يَسْتَجِيبُونَ
not they respond
பதில் தர மாட்டார்கள்
lahum
لَهُم
to them
அவர்களுக்கு
bishayin illā
بِشَىْءٍ إِلَّا
with a thing except
எதையும்/தவிர
kabāsiṭi
كَبَٰسِطِ
like one who stretches
விரிப்பவனைப் போன்றே
kaffayhi
كَفَّيْهِ
his hands
தன் இரு கைகளை
ilā l-māi
إِلَى ٱلْمَآءِ
towards water
பக்கம்/தண்ணீர்
liyablugha
لِيَبْلُغَ
to reach
அது அடைவதற்காக
fāhu
فَاهُ
his mouth
தன் வாயை
wamā huwa
وَمَا هُوَ
but not it
இல்லை/அதுவோ
bibālighihi
بِبَٰلِغِهِۦۚ
reaches it
அடையாது/அதை
wamā duʿāu
وَمَا دُعَآءُ
And not (is) the supplication
இல்லை/பிரார்த்தனை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
(of) the disbelievers
நிராகரிப்பாளர்களின்
illā fī ḍalālin
إِلَّا فِى ضَلَٰلٍ
but in error
வழிகேட்டில் தவிர

Transliteration:

Lahoo da'watul haqq; wallazeena yad'oona min doonihee laa yastajeeboona lahum bishai'in illaa kabaasiti kaffaihi ilal maaa'i liyablugha faahu wa maa huwa bibaalighih; wa maa du'aaa'ul aafireena illaa fee dalaal (QS. ar-Raʿd:14)

English Sahih International:

To Him [alone] is the supplication of truth. And those they call upon besides Him do not respond to them with a thing, except as one who stretches his hands toward water [from afar, calling it] to reach his mouth, but it will not reach it [thus]. And the supplication of the disbelievers is not but in error [i.e., futility]. (QS. Ar-Ra'd, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

(நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து) அழைக்கின்றார்களோ அவர்களுக்கு, அவை யாதொன்றையும் கொடுத்து விடாது. (அல்லாஹ்வையன்றி மற்றவற்றை அழைப்பவர்களின் உதாரணம்:) தண்ணீர் (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக்கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதனை அவன் தன் கையைக்கொண்டு அள்ளிக் குடிக்கும் வரையில் அவனுடைய) வாயை அது அடைந்துவிடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது. (ஸூரத்துர் ரஃது, வசனம் ௧௪)

Jan Trust Foundation

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பலன் தரும்) உண்மைப் பிரார்த்தனை அவனுக்கே உரியது. (மக்கள்) அவனையன்றி எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் அவர்களுக்கு எதையும் பதில் தரமாட்டார்கள். தண்ணீர் பக்கம் தன் இரு கைகளையும் அது (தானாகவே) தன் வாயை அடைவதற்காக விரிப்பவனைப் போன்றே தவிர (இவர்களின் செயல் வேறில்லை). அதுவோ (ஒரு போதும்) அதை அடையாது. (சிலைகளை அழைக்கும்) நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர வேறில்லை. (அவை அவர்களுக்கு எப்பலனையும் அளிக்காது.)