Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஃது - Page: 4

Ar-Ra'd

(ar-Raʿd)

௩௧

وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰىۗ بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِيْعًاۗ اَفَلَمْ يَا۟يْـَٔسِ الَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْ لَّوْ يَشَاۤءُ اللّٰهُ لَهَدَى النَّاسَ جَمِيْعًاۗ وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا تُصِيْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِيْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰى يَأْتِيَ وَعْدُ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ ࣖ ٣١

walaw anna qur'ānan
وَلَوْ أَنَّ قُرْءَانًا
வேதம்/இருந்தால்
suyyirat
سُيِّرَتْ
நகர்த்தப்பட்டது
bihi
بِهِ
அதைக் கொண்டு
l-jibālu
ٱلْجِبَالُ
மலைகள்
aw quṭṭiʿat
أَوْ قُطِّعَتْ
அல்லது/துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால்
bihi
بِهِ
அதைக் கொண்டு
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
aw kullima
أَوْ كُلِّمَ
அல்லது/பேச வைக்கப்பட்டிருந்தால்...
bihi
بِهِ
அதைக் கொண்டு
l-mawtā
ٱلْمَوْتَىٰۗ
மரணித்தவர்கள்
bal lillahi
بَل لِّلَّهِ
மாறாக/அல்லாஹ்வுக்குரியனவே
l-amru
ٱلْأَمْرُ
அதிகாரம்
jamīʿan
جَمِيعًاۗ
அனைத்தும்
afalam yāy'asi
أَفَلَمْ يَا۟يْـَٔسِ
அறியவில்லையா?
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டனர்
an law yashāu
أَن لَّوْ يَشَآءُ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahadā
لَهَدَى
நேர்வழி படுத்தியிருப்பான்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
jamīʿan
جَمِيعًاۗ
அனைவரை
walā yazālu
وَلَا يَزَالُ
தொடர்ந்து இருக்கும்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
tuṣībuhum
تُصِيبُهُم
அடையும்/அவர்களை
bimā
بِمَا
காரணமாக
ṣanaʿū
صَنَعُوا۟
செய்தனர்
qāriʿatun
قَارِعَةٌ
ஒரு திடுக்கம்
aw
أَوْ
அல்லது
taḥullu
تَحُلُّ
நீர் இறங்குவீர்
qarīban
قَرِيبًا
அருகாமையில்
min dārihim
مِّن دَارِهِمْ
அவர்களின் ஊருக்கு
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
yatiya
يَأْتِىَ
வரும்
waʿdu
وَعْدُ
வாக்குறுதி
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yukh'lifu
لَا يُخْلِفُ
மாற்ற மாட்டான்
l-mīʿāda
ٱلْمِيعَادَ
வாக்குறுதியை
(நபியே! நாம் இவர்களுக்கு இதனையன்றி வேறு) யாதொரு குர்ஆனை அருள் செய்து, அதைக் கொண்டு மலைகள் நகரும் படியாகவோ அல்லது பூமியைத் துண்டு துண்டாகவோ அல்லது மரணித்தவர்களைப் பேசும்படியாகவோ செய்தபோதிலும், (நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.) எனினும், எல்லா காரியங்களும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மனிதர்கள் அனைவரையுமே நேரான வழியில் நடத்தி விடுவான் என்பதைப் பற்றி நம்பிக்கையாளர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையா? நிராகரிப்பவர்களை அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக (அவர்கள் திடுக்கிடக்கூடிய) யாதேனுமோர் சம்பவம் அவர்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும். அல்லது அவர்களின் வீட்டிற்குச் சமீபத்திலேயே (அத்தகைய சம்பவங்கள்) சம்பவித்துக் கொண்டே இருந்து ("நீங்கள் வெற்றி கொள்வீர்கள்" என்று உங்களுக்குக் கூறப்பட்ட) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடய வாக்குறுதியில் தவறுவதில்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௧)
Tafseer
௩௨

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَيْتُ لِلَّذِيْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ ٣٢

walaqadi us'tuh'zi-a
وَلَقَدِ ٱسْتُهْزِئَ
திட்டமாக பரிகசிக்கப்பட்டனர்
birusulin
بِرُسُلٍ
தூதர்கள்
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
fa-amlaytu
فَأَمْلَيْتُ
நீட்டினேன்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
thumma
ثُمَّ
பிறகு
akhadhtuhum
أَخَذْتُهُمْۖ
பிடித்தேன்/அவர்களை
fakayfa
فَكَيْفَ
எப்படி?
kāna
كَانَ
இருந்தது
ʿiqābi
عِقَابِ
என் தண்டனை
(நபியே!) உங்களுக்கு முன்னர் (வந்த நம்முடைய) தூதர் பலரும் (இவ்வாறே) நிச்சயமாகப் பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களையும் (உடனே தண்டிக்காது) நாம் தவணையளித்து விட்டு வைத்தோம். ஆயினும், பின்னர் நாம் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். என்னுடைய தண்டனை எப்படி இருந்தது? (என்பதைச் சிந்திப்பீராக!) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௨)
Tafseer
௩௩

اَفَمَنْ هُوَ قَاۤىِٕمٌ عَلٰى كُلِّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْۚ وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ ۗ قُلْ سَمُّوْهُمْۗ اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا يَعْلَمُ فِى الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ۗبَلْ زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِيْلِ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ٣٣

afaman
أَفَمَنْ
யார்?
huwa
هُوَ
அவன்
qāimun
قَآئِمٌ
நிர்வகிப்பவன்
ʿalā
عَلَىٰ
மீது
kulli
كُلِّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍۭ
ஆன்மா
bimā kasabat
بِمَا كَسَبَتْۗ
அவை செய்தவற்றுக்கு
wajaʿalū
وَجَعَلُوا۟
அவர்கள் ஏற்படுத்தினர்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
shurakāa
شُرَكَآءَ
இணைகளை
qul
قُلْ
கூறுவீராக
sammūhum
سَمُّوهُمْۚ
பெயரிடுங்கள் அவற்றுக்கு
am tunabbiūnahu
أَمْ تُنَبِّـُٔونَهُۥ
அல்லது/அறிவிக்கிறீர்களா?/அவனுக்கு
bimā lā yaʿlamu
بِمَا لَا يَعْلَمُ
அவன் அறியாததை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
am
أَم
அல்லது
biẓāhirin mina l-qawli
بِظَٰهِرٍ مِّنَ ٱلْقَوْلِۗ
பொய்யான சொல்லை
bal
بَلْ
மாறாக
zuyyina
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டது
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
makruhum
مَكْرُهُمْ
சூழ்ச்சி அவர்களுடைய
waṣuddū
وَصُدُّوا۟
இன்னும் தடுக்கப்பட்டனர்
ʿani l-sabīli
عَنِ ٱلسَّبِيلِۗ
பாதையிலிருந்து
waman yuḍ'lili
وَمَن يُضْلِلِ
எவரை/ வழிகெடுப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
famā lahu
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
min hādin
مِنْ هَادٍ
நேர்வழிகாட்டுபவர் எவரும்
அவனோ, ஒவ்வொரு ஆத்மாவும் செய்யும் ஒவ்வொன் றையும் நன்கறிந்தவன். அவர்களோ (பொய்யான தெய்வங்களை) அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர்! (இத்தகைய குற்றவாளி களைத் தண்டிக்காது விட்டுவிடுவானா? நபியே! நீங்கள் அவர்களை நோக்கி, "நீங்கள் கூறும் தெய்வங்கள் மெய்யாகவே அவனுக்கு இணையானவையாக இருந்தால்,) அவற்றின் பெயரை நீங்கள் கூறுங்கள் அல்லது பூமியில் (அவனுக்கு இணையான ஒன்றிருந்து அதனை) அவன் அறியாது போய் அதைப்பற்றி அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது, உண்மையில்லாத) வெறும் வார்த்தைகள் தாமா?" என்று கேளுங்கள். இவைகளில் ஒன்றுமில்லை! இந்நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகளே அழகாகக் காண்பிக்கப் பெற்றுவிட்டன. (ஆதலால்தான் அவர்கள்) நேரான வழியிலிருந்தும் தடுக்கப்பட்டுவிட்டனர். எவர்களை (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் ஒருவருமில்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௩)
Tafseer
௩௪

لَهُمْ عَذَابٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ٣٤

lahum
لَّهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
உலகம்
walaʿadhābu
وَلَعَذَابُ
வேதனைதான்
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
ashaqqu
أَشَقُّۖ
மிக சிரமமானது
wamā
وَمَا
இல்லை
lahum
لَهُم
அவர்களை
mina
مِّنَ
இருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
min wāqin
مِن وَاقٍ
பாதுகாப்பவர் எவரும்
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு. (மறுமையிலும் வேதனையுண்டு. எனினும், அவர்களுக்கு) மறுமையில் கிடைக்கும் வேதனையோ மிகக் கொடியது. அல்லாஹ்விடத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவரும் இல்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௪)
Tafseer
௩௫

۞ مَثَلُ الْجَنَّةِ الَّتِيْ وُعِدَ الْمُتَّقُوْنَۗ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۗ اُكُلُهَا دَاۤىِٕمٌ وَّظِلُّهَاۗ تِلْكَ عُقْبَى الَّذِيْنَ اتَّقَوْا ۖوَّعُقْبَى الْكٰفِرِيْنَ النَّارُ ٣٥

mathalu
مَّثَلُ
தன்மை
l-janati
ٱلْجَنَّةِ
சொர்க்கத்தின்
allatī wuʿida
ٱلَّتِى وُعِدَ
எது/வாக்களிக்கப்பட்டார்(கள்)
l-mutaqūna
ٱلْمُتَّقُونَۖ
அஞ்சியவர்கள்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
ukuluhā
أُكُلُهَا
அதன் உணவுகள்
dāimun
دَآئِمٌ
நிலையானவை
waẓilluhā
وَظِلُّهَاۚ
இன்னும் அதன் நிழல்
til'ka
تِلْكَ
இதுதான்
ʿuq'bā
عُقْبَى
முடிவு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittaqaw
ٱتَّقَوا۟ۖ
அஞ்சினர்
waʿuq'bā
وَّعُقْبَى
முடிவோ
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களின்
l-nāru
ٱلنَّارُ
நரகம்தான்
இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையோ அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அங்கு (அவர்களுக்குக்) கிடைக்கும் உணவுகள் (என்றுமே) நிலையானவை. அதன் நிழலும் (அவ்வாறே நிலையானது.) இதுதான் இறை அச்சமுடையவர்களின் முடிவாகும். நிராகரிப்பவர்களின் முடிவோ நரகம்தான்! ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௫)
Tafseer
௩௬

وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَفْرَحُوْنَ بِمَآ اُنْزِلَ اِلَيْكَ وَمِنَ الْاَحْزَابِ مَنْ يُّنْكِرُ بَعْضَهٗ ۗ قُلْ اِنَّمَآ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَآ اُشْرِكَ بِهٖ ۗاِلَيْهِ اَدْعُوْا وَاِلَيْهِ مَاٰبِ ٣٦

wa-alladhīna ātaynāhumu
وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
yafraḥūna
يَفْرَحُونَ
மகிழ்வார்கள்
bimā unzila ilayka
بِمَآ أُنزِلَ إِلَيْكَۖ
இறக்கப்பட்டதைக் கொண்டு/உமக்கு
wamina l-aḥzābi
وَمِنَ ٱلْأَحْزَابِ
இன்னும் கூட்டங்களில்
man yunkiru
مَن يُنكِرُ
எவர் மறுப்பார்
baʿḍahu
بَعْضَهُۥۚ
அதில் சிலவற்றை
qul
قُلْ
கூறுவீராக
innamā umir'tu
إِنَّمَآ أُمِرْتُ
நான் கட்டளையிடப்பட்டதெல்லாம்
an aʿbuda
أَنْ أَعْبُدَ
நான் வணங்குவதற்கு
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
walā ush'rika bihi
وَلَآ أُشْرِكَ بِهِۦٓۚ
நான் இணைவைக்காமல் இருக்க/அவனுக்கு
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கமே
adʿū
أَدْعُوا۟
அழைக்கிறேன்
wa-ilayhi
وَإِلَيْهِ
இன்னும் அவன் பக்கமே
maābi
مَـَٔابِ
என் திரும்புதல்
(நபியே! முன்னர்) நாம் எவர்களுக்கு வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி சந்தோஷப்படுவார்கள். எனினும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை நிராகரிப்பவர்களும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் (அவர்களை நோக்கி,) "அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணை வைக்காது, அவன் ஒருவனையே நான் வணங்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (உங்களை) நான் அவனிடமே அழைக்கின்றேன்; நானும் அவனிடமே செல்வேன்" என்று கூறுங்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௬)
Tafseer
௩௭

وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِيًّاۗ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَاۤءَهُمْ بَعْدَمَا جَاۤءَكَ مِنَ الْعِلْمِۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا وَاقٍ ࣖ ٣٧

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
ḥuk'man
حُكْمًا
சட்டமாக
ʿarabiyyan
عَرَبِيًّاۚ
அரபி மொழியில்
wala-ini ittabaʿta
وَلَئِنِ ٱتَّبَعْتَ
நீங்கள் பின்பற்றினால்
ahwāahum
أَهْوَآءَهُم
விருப்பங்களை அவர்களுடைய
baʿdamā jāaka
بَعْدَمَا جَآءَكَ
பின்னர் உமக்கு வந்தது
mina l-ʿil'mi
مِنَ ٱلْعِلْمِ
கல்வி
mā laka
مَا لَكَ
இல்லை/உமக்கு
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
min waliyyin
مِن وَلِىٍّ
உதவியாளர் எவரும்
walā wāqin
وَلَا وَاقٍ
பாதுகாவலர் இல்லை
(நபியே! நீங்கள் நன்கறிந்து கொள்ளும் பொருட்டு) நாம் இதன் சட்டதிட்டங்களை அரபி (மொழி)யில் இவ்வாறு (விவரித்து) இறக்கி வைத்தோம். ஆகவே, (வஹீயின் மூலம்) உங்களுக்கு (திருக்குர்ஆன்) ஞானம் கிடைத்ததற்குப் பின்னரும் நீங்கள் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ் விடத்தில் (உங்களை) பாதுகாத்துக் கொள்ளவோ, உங்களுக்கு உதவி செய்யவோ ஒருவரும் இருக்ககமாட்டார். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௭)
Tafseer
௩௮

وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً ۗوَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّأْتِيَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗلِكُلِّ اَجَلٍ كِتَابٌ ٣٨

walaqad arsalnā
وَلَقَدْ أَرْسَلْنَا
அனுப்பி இருக்கிறோம்
rusulan
رُسُلًا
தூதர்களை
min qablika
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
azwājan
أَزْوَٰجًا
மனைவிகளை
wadhurriyyatan
وَذُرِّيَّةًۚ
இன்னும் சந்ததியை(யும்)
wamā kāna
وَمَا كَانَ
முடியாது
lirasūlin
لِرَسُولٍ
(எந்த) தூதருக்கு
an yatiya
أَن يَأْتِىَ
அவர் வருவது
biāyatin
بِـَٔايَةٍ
அத்தாட்சியைக் கொண்டு
illā
إِلَّا
தவிர
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டே
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
likulli
لِكُلِّ
ஒவ்வொரு
ajalin
أَجَلٍ
தவணைக்கும்
kitābun
كِتَابٌ
ஒரு விதி
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். (உங்களைப் போலவே) அவர்களுக்கும் மனைவி மக்களையும் கொடுத்திருந்தோம். (ஆகவே, உங்களுக்கு மனைவி, மக்கள் இருப்பதைப் பற்றி இவர்கள் குறை கூறமுடியாது.) அன்றி, அல்லாஹ்வின் அனுமதியின்றி யாதொரு தூதரும் எத்தகைய அத்தாட்சியும் கொண்டு வருவதற்கில்லை. (அவன் கற்பனை செய்திருக்கும்) ஒவ்வொன்றுக்கும் தவணையும் (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது. (அது அத்தவணைக்கு முந்தியும் வராது; பிந்தியும் வராது.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௮)
Tafseer
௩௯

يَمْحُوا اللّٰهُ مَا يَشَاۤءُ وَيُثْبِتُ ۚوَعِنْدَهٗٓ اُمُّ الْكِتٰبِ ٣٩

yamḥū
يَمْحُوا۟
அழிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā yashāu
مَا يَشَآءُ
அவன் நாடியதை
wayuth'bitu
وَيُثْبِتُۖ
தரிபடுத்துகிறான்
waʿindahu
وَعِندَهُۥٓ
இன்னும் அவனிடம்தான்
ummu
أُمُّ
தாய்
l-kitābi
ٱلْكِتَٰبِ
புத்தகம்
எனினும், அவன் (அதில்) நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லா காரியங்களும் தவறாது நடைபெறும்.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௯)
Tafseer
௪௦

وَاِنْ مَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِيْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ وَعَلَيْنَا الْحِسَابُ ٤٠

wa-in mā nuriyannaka
وَإِن مَّا نُرِيَنَّكَ
நிச்சயமாக நாம் காண்பித்தால்/உமக்கு
baʿḍa alladhī
بَعْضَ ٱلَّذِى
சிலதை/எது
naʿiduhum
نَعِدُهُمْ
நாம் வாக்களிக்கிறோம் அவர்களுக்கு
aw natawaffayannaka
أَوْ نَتَوَفَّيَنَّكَ
அல்லது/கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை
fa-innamā
فَإِنَّمَا
ஆகவே, எல்லாம்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-balāghu
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதுதான்
waʿalaynā
وَعَلَيْنَا
நம்மீதுதான்
l-ḥisābu
ٱلْحِسَابُ
விசாரணை
(நபியே!) அவர்களுக்கு (வருமென) நாம் வாக்களித்த (தண்டனைகளில்) சிலவற்றை (நீங்கள் உயிருடன் இருக்கும்போதே) உங்களுடைய கண்ணால் நீங்கள் காணும்படி செய்தாலும் அல்லது (அது வருவதற்கு முன்னர்) நாம் உங்களைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்!) உங்களுடைய கடமையெல்லாம் தூதை சேர்ப்பிப்பது தான்! (அவர்களிடம் அதன்) கணக்கை வாங்குவது நம் கடமையாகும். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪௦)
Tafseer