Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஃது - Page: 3

Ar-Ra'd

(ar-Raʿd)

௨௧

وَالَّذِيْنَ يَصِلُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖٓ اَنْ يُّوْصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُوْنَ سُوْۤءَ الْحِسَابِ ۗ ٢١

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
yaṣilūna
يَصِلُونَ
சேர்ப்பார்கள்
mā amara
مَآ أَمَرَ
எதை/ஏவினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihi an yūṣala
بِهِۦٓ أَن يُوصَلَ
அதை/சேர்க்கப்பட வேண்டும்
wayakhshawna
وَيَخْشَوْنَ
இன்னும் அச்சம் கொள்வார்கள்
rabbahum
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
wayakhāfūna
وَيَخَافُونَ
இன்னும் பயப்படுவார்கள்
sūa
سُوٓءَ
கடினமான
l-ḥisābi
ٱلْحِسَابِ
விசாரணையை
மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௧)
Tafseer
௨௨

وَالَّذِيْنَ صَبَرُوا ابْتِغَاۤءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً وَّيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ اُولٰۤىِٕكَ لَهُمْ عُقْبَى الدَّارِۙ ٢٢

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ṣabarū
صَبَرُوا۟
பொறுத்தனர்
ib'tighāa
ٱبْتِغَآءَ
நாடி
wajhi
وَجْهِ
முகத்தை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
wa-aqāmū
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினர்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wa-anfaqū
وَأَنفَقُوا۟
இன்னும் தர்மம் புரிந்தனர்
mimmā razaqnāhum
مِمَّا رَزَقْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
sirran
سِرًّا
இரகசியமாக
waʿalāniyatan
وَعَلَانِيَةً
இன்னும் வெளிப்படையாக
wayadraūna
وَيَدْرَءُونَ
இன்னும் தடுப்பார்கள்
bil-ḥasanati
بِٱلْحَسَنَةِ
நன்மையைக் கொண்டு
l-sayi-ata
ٱلسَّيِّئَةَ
தீமையை
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
lahum
لَهُمْ
இவர்களுக்குத்தான்
ʿuq'bā
عُقْبَى
முடிவு
l-dāri
ٱلدَّارِ
மறுமை
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தைக் கோரி (எத்தகைய கஷ்டத்தையும்) பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள்; தொழுகையையும் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் (கைக்) கொண்டே தீமையைத் தவிர்த்து விடுவார்கள். இத்தகையவர்களுக்கு (மறுமையில்) நல்ல முடிவு உண்டு. (அதாவது நிலையான சுவனபதி கூலியாகக் கிடைக்கும்.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௨)
Tafseer
௨௩

جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَاۤىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ وَالْمَلٰۤىِٕكَةُ يَدْخُلُوْنَ عَلَيْهِمْ مِّنْ كُلِّ بَابٍۚ ٢٣

jannātu
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
ʿadnin
عَدْنٍ
அத்ன்
yadkhulūnahā
يَدْخُلُونَهَا
நுழைவார்கள்/அதில்
waman
وَمَن
இன்னும் இன்னும் எவர்
ṣalaḥa
صَلَحَ
நல்லவரானார்
min ābāihim
مِنْ ءَابَآئِهِمْ
இவர்களுடைய மூதாதைகளில்
wa-azwājihim
وَأَزْوَٰجِهِمْ
இன்னும் இவர்களுடைய மனைவிகளில்
wadhurriyyātihim
وَذُرِّيَّٰتِهِمْۖ
இன்னும் இவர்களுடைய சந்ததிகளில்
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
yadkhulūna
يَدْخُلُونَ
நுழைவார்கள்
ʿalayhim min
عَلَيْهِم مِّن
இவர்களிடம்/இருந்து
kulli bābin
كُلِّ بَابٍ
ஒவ்வொரு/வாசல்
நிலையான சுவனபதிகளில் இவர்களும், நன்னடத்தையுடைய இவர்களுடைய தந்தைகளும், இவர்களுடைய மனைவிகளும், இவர்களின் சந்ததிகளும் நுழைந்து விடுவார்கள். ஒவ்வொரு வாசலிலிருந்தும் மலக்குகள் இவர்களிடம் வந்து, ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௩)
Tafseer
௨௪

سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِۗ ٢٤

salāmun
سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகுக
ʿalaykum
عَلَيْكُم
உங்களுக்கு
bimā ṣabartum
بِمَا صَبَرْتُمْۚ
நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால்
faniʿ'ma
فَنِعْمَ
மிக்க நல்லதாயிற்று
ʿuq'bā
عُقْبَى
இறுதி
l-dāri
ٱلدَّارِ
வீடு
(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (உங்களுடைய இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௪)
Tafseer
௨௫

وَالَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ ۢ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖٓ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِۙ اُولٰۤىِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْۤءُ الدَّارِ ٢٥

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
yanquḍūna
يَنقُضُونَ
முறிக்கிறார்கள்
ʿahda
عَهْدَ
வாக்குறுதியை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mīthāqihi
مِيثَٰقِهِۦ
அது உறுதியான
wayaqṭaʿūna
وَيَقْطَعُونَ
இன்னும் துண்டிக்கிறார்கள்
مَآ
எதை
amara
أَمَرَ
ஏவினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihi
بِهِۦٓ
அதை
an yūṣala
أَن يُوصَلَ
சேர்க்கப்படும்
wayuf'sidūna
وَيُفْسِدُونَ
இன்னும் விஷமம் செய்வார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۙ
பூமியில்
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
lahumu l-laʿnatu
لَهُمُ ٱللَّعْنَةُ
இவர்களுக்கு/சாபம்
walahum
وَلَهُمْ
இன்னும் இவர்களுக்கு
sūu
سُوٓءُ
மிகக் கெட்டது
l-dāri
ٱلدَّارِ
வீடு
எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை அதனை உறுதிப்படுத்திய பின்னரும் முறித்து விடுகிறார்களோ அவர் களுக்கும், எவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி ஏவியதைப் பிரித்து விடுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டு அலைகிறார்களோ அவர்களுக்கும் (இறைவனுடைய) சாபம்தான் கிடைக்கும். அன்றி, அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் (தயார்படுத்தப்பட்டு) இருக்கிறது. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௫)
Tafseer
௨௬

اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ ۗوَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَاۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ ࣖ ٢٦

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yabsuṭu
يَبْسُطُ
விரிவுபடுத்துகிறான்
l-riz'qa
ٱلرِّزْقَ
வாழ்க்கை வசதியை
liman
لِمَن
எவருக்கு
yashāu
يَشَآءُ
நாடுகின்றான்
wayaqdiru
وَيَقْدِرُۚ
இன்னும் சுருக்குகிறான்
wafariḥū
وَفَرِحُوا۟
இன்னும் மகிழ்கின்றனர்
bil-ḥayati
بِٱلْحَيَوٰةِ
வாழ்வைக் கொண்டு
l-dun'yā wamā
ٱلدُّنْيَا وَمَا
உலகம்/இல்லை
l-ḥayatu l-dun'yā
ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கை
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
illā matāʿun
إِلَّا مَتَٰعٌ
தவிர/ஒரு சுகம்
அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே சந்தோஷமடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) மிக்க அற்பமேயன்றி வேறில்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௬)
Tafseer
௨௭

وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۗ قُلْ اِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْٓ اِلَيْهِ مَنْ اَنَابَۖ ٢٧

wayaqūlu
وَيَقُولُ
கூறுகிறார்(கள்)
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/நிராகரித்தனர்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
இவர் மீது
āyatun
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
min rabbihi
مِّن رَّبِّهِۦۗ
இவருடைய இறைவனிடமிருந்து
qul
قُلْ
கூறுவீராக
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
yuḍillu
يُضِلُّ
வழிகெடுக்கிறான்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
wayahdī
وَيَهْدِىٓ
இன்னும் நேர்வழி செலுத்துகிறான்
ilayhi
إِلَيْهِ
தன் பக்கம்
man anāba
مَنْ أَنَابَ
எவர்/திரும்பினார்
(நபியே!) இந்நிராகரிப்பவர்கள், (நம் தூதராகிய உங்களைக் குறிப்பிட்டு) "இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பியவாறு) ஏதேனுமோர் அத்தாட்சி அருளப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் (தண்டிக்க) நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். முற்றிலும் அவனையே நோக்கி நிற்பவர்களைத்தான் நேரான வழியில் செலுத்துகிறான். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௭)
Tafseer
௨௮

الَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَىِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ۗ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ ۗ ٢٨

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
wataṭma-innu
وَتَطْمَئِنُّ
இன்னும் நிம்மதியடைகின்றன
qulūbuhum
قُلُوبُهُم
உள்ளங்கள்/அவர்களுடைய
bidhik'ri
بِذِكْرِ
நினைவால்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
bidhik'ri
بِذِكْرِ
நினைவைக் கொண்டே
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
taṭma-innu
تَطْمَئِنُّ
நிம்மதியடைகின்றன
l-qulūbu
ٱلْقُلُوبُ
உள்ளங்கள்
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௮)
Tafseer
௨௯

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰى لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ ٢٩

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டு
waʿamilū
وَعَمِلُوا۟
செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
ṭūbā
طُوبَىٰ
நற்பாக்கியம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
waḥus'nu
وَحُسْنُ
அழகிய
maābin
مَـَٔابٍ
மீளுமிடம்
எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௯)
Tafseer
௩௦

كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِيْٓ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَآ اُمَمٌ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ الَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ وَهُمْ يَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِۗ قُلْ هُوَ رَبِّيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ مَتَابِ ٣٠

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
arsalnāka
أَرْسَلْنَٰكَ
அனுப்பினோம்/உம்மை
fī ummatin
فِىٓ أُمَّةٍ
ஒரு சமுதாயத்திடம்
qad khalat
قَدْ خَلَتْ
சென்றிருக்கின்றன
min qablihā
مِن قَبْلِهَآ
இவர்களுக்கு முன்னரும்
umamun
أُمَمٌ
பல சமுதாயங்கள்
litatluwā
لِّتَتْلُوَا۟
நீர் ஓதுவதற்காக
ʿalayhimu
عَلَيْهِمُ
இவர்கள் முன்
alladhī awḥaynā
ٱلَّذِىٓ أَوْحَيْنَآ
எது/நாம் வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
wahum
وَهُمْ
இவர்களோ
yakfurūna
يَكْفُرُونَ
நிராகரிக்கின்றனர்
bil-raḥmāni
بِٱلرَّحْمَٰنِۚ
ரஹ்மானை
qul
قُلْ
கூறுவீராக
huwa
هُوَ
அவன்தான்
rabbī
رَبِّى
என் இறைவன்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَ
அவனை
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீது
tawakkaltu
تَوَكَّلْتُ
நம்பிக்கை வைத்தேன்
wa-ilayhi
وَإِلَيْهِ
இன்னும் அவனிடமே
matābi
مَتَابِ
என் பாவ மீட்சி
(நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உங்களையும் நாம் (நம்முடைய தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் யாதொரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீங்கள் ஓதிக் காண்பித்து வாருங்கள். எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "அவன்தான் என்னுடைய இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவரு மில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்." ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௦)
Tafseer