Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௮

Qur'an Surah Yusuf Verse 88

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰٓاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاۗ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ (يوسف : ١٢)

falammā
فَلَمَّا
So when
போது
dakhalū
دَخَلُوا۟
they entered
அவர்கள் நுழைந்தனர்
ʿalayhi
عَلَيْهِ
upon him
அவரிடம்
qālū
قَالُوا۟
they said
கூறினர்
yāayyuhā l-ʿazīzu
يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ
"O Aziz! "O Aziz!
ஓ அதிபரே!
massanā
مَسَّنَا
Has touched us
ஏற்பட்டது/எங்களுக்கு
wa-ahlanā
وَأَهْلَنَا
and our family
இன்னும் குடும்பத்திற்கும்/ எங்கள்
l-ḍuru
ٱلضُّرُّ
the adversity
வறுமை, கொடுமை
waji'nā
وَجِئْنَا
and we have come
நாங்கள் வந்தோம்
bibiḍāʿatin
بِبِضَٰعَةٍ
with goods
ஒரு பொருளைக் கொண்டு
muz'jātin
مُّزْجَىٰةٍ
(of) little value
அற்பமானது
fa-awfi
فَأَوْفِ
but pay (in) full
ஆகவே முழு மைப்படுத்துவீராக
lanā
لَنَا
to us
எங்களுக்கு
l-kayla
ٱلْكَيْلَ
the measure
அளவையை
wataṣaddaq
وَتَصَدَّقْ
and be charitable
இன்னும் தானம் புரிவீராக
ʿalaynā
عَلَيْنَآۖ
to us
எங்கள் மீது
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yajzī
يَجْزِى
rewards
கூலியளிப்பான்
l-mutaṣadiqīna
ٱلْمُتَصَدِّقِينَ
the charitable"
தர்மசாலிகளுக்கு

Transliteration:

Falammaa dakhaloo 'alaihi qaaloo yaaa ayyuhal 'Azeezu massanaa wa ahlanad durru wa ji'naa bibidaa 'timmuzjaatin fa awfi lanal kaila wa tasaddaq 'alainaa innal laaha yajzil mutasaddiqeen (QS. Yūsuf:88)

English Sahih International:

So when they entered upon him [i.e., Joseph], they said, "O Azeez, adversity has touched us and our family, and we have come with goods poor in quality, but give us full measure and be charitable to us. Indeed, Allah rewards the charitable." (QS. Yusuf, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி ("மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸை! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதனைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிப்பான்" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௮)

Jan Trust Foundation

அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) நுழைந்து, “அதிபரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வறுமை ஏற்பட்டது. ஓர் அற்பப் பொருளை (கிரயமாக இங்கே) நாங்கள் கொண்டு வந்தோம். (அதை ஏற்று) எங்களுக்கு அளவையை முழுமைப்படுத்துவீராக! எங்கள் மீது தானம் புரிவீராக! நிச்சயமாக அல்லாஹ் தர்மசாலிகளுக்கு (நற்)கூலியளிப்பான்”என்று கூறினர்.