Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௪

Qur'an Surah Yusuf Verse 84

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰٓاَسَفٰى عَلٰى يُوْسُفَ وَابْيَضَّتْ عَيْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيْمٌ (يوسف : ١٢)

watawallā
وَتَوَلَّىٰ
And he turned away
இன்னும் விலகினார்
ʿanhum
عَنْهُمْ
from them
அவர்களை விட்டு
waqāla
وَقَالَ
and said
இன்னும் கூறினார்
yāasafā
يَٰٓأَسَفَىٰ
"Alas my grief
என் துயரமே
ʿalā
عَلَىٰ
over
மீது
yūsufa
يُوسُفَ
Yusuf!"
யூஸுஃப்
wa-ib'yaḍḍat
وَٱبْيَضَّتْ
And became white
வெளுத்தன
ʿaynāhu
عَيْنَاهُ
his eyes
அவரது இரு கண்கள்
mina l-ḥuz'ni
مِنَ ٱلْحُزْنِ
from the grief
கவலையால்
fahuwa
فَهُوَ
and he (was)
அவர்
kaẓīmun
كَظِيمٌ
a suppressor
அடக்கிக் கொள்பவர்

Transliteration:

Wa tawallaa 'anhum wa qaala yaaa asafaa 'alaa Yoosufa wabyaddat 'aynaahu minal huzni fahuwa kazeem (QS. Yūsuf:84)

English Sahih International:

And he turned away from them and said, "Oh, my sorrow over Joseph," and his eyes became white from grief, for he was [of that] a suppressor. (QS. Yusuf, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

அவர்களை விட்டு விலகிச் சென்று, "யூஸுஃபைப் பற்றி என்னுடைய துக்கமே!" என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௪)

Jan Trust Foundation

பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை விட்டு விலகி (திரும்பிச் சென்று), “யூஸுஃப் மீது என் துயரமே!” என்று கூறினார். அவரது இரு கண்களும் கவலையால் (அழுதழுது) வெளுத்தன. அவர் (தன் கோபத்தையும் கவலையையும்) அடக்கிக் கொள்பவர்.