Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௬௫

Qur'an Surah Yusuf Verse 65

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَيْهِمْۗ قَالُوْا يٰٓاَبَانَا مَا نَبْغِيْۗ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَيْنَا وَنَمِيْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيْرٍۗ ذٰلِكَ كَيْلٌ يَّسِيْرٌ (يوسف : ١٢)

walammā
وَلَمَّا
And when
போது
fataḥū
فَتَحُوا۟
they opened
அவர்கள் திறந்தனர்
matāʿahum
مَتَٰعَهُمْ
their baggage
தங்கள் பொருளை
wajadū
وَجَدُوا۟
they found
கண்டனர்
biḍāʿatahum
بِضَٰعَتَهُمْ
their merchandise
தங்கள் கிரயம்
ruddat
رُدَّتْ
returned
திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது
ilayhim
إِلَيْهِمْۖ
to them
தங்களிடம்
qālū
قَالُوا۟
They said
கூறினர்
yāabānā
يَٰٓأَبَانَا
"O our father!
எங்கள் தந்தையே
mā nabghī
مَا نَبْغِىۖ
What (could) we desire?
என்ன தேடுகிறோம்?
hādhihi
هَٰذِهِۦ
This
இதோ
biḍāʿatunā
بِضَٰعَتُنَا
(is) our merchandise
நம் கிரயம்
ruddat
رُدَّتْ
returned
திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது
ilaynā
إِلَيْنَاۖ
to us
நம்மிடமே
wanamīru
وَنَمِيرُ
And we will get provision
தானியங்களைக் கொண்டு வருவோம்
ahlanā
أَهْلَنَا
(for) our family
நம் குடும்பத்திற்கு
wanaḥfaẓu
وَنَحْفَظُ
and we will protect
இன்னும் காப்பாற்றுவோம்
akhānā
أَخَانَا
our brother
சகோதரனை/எங்கள்
wanazdādu
وَنَزْدَادُ
and get an increase
இன்னும் அதிகமாக்குவோம்
kayla
كَيْلَ
measure
அளவையை
baʿīrin
بَعِيرٍۖ
(of) a camel's (load)
ஓர் ஒட்டகத்தின்
dhālika kaylun
ذَٰلِكَ كَيْلٌ
That (is) a measurement
இது/ஓர் அளவை
yasīrun
يَسِيرٌ
easy"
இலகுவானது

Transliteration:

Wa lammaa fatahoo mataa 'ahum wajadoo bidaa'atahum ruddat ilaihim qaaloo yaaa abaanaa maa nabghee; haazihee bida 'atunaa ruddat ilainaa wa nameeru ahlanaa wa nahfazu akhaanaa wa nazdaadu kaila ba'eer; zaalika kailuny yaseer (QS. Yūsuf:65)

English Sahih International:

And when they opened their baggage, they found their merchandise returned to them. They said, "O our father, what [more] could we desire? This is our merchandise returned to us. And we will obtain supplies [i.e., food] for our family and protect our brother and obtain an increase of a camel's load; that is an easy measurement." (QS. Yusuf, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு "எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௬௫)

Jan Trust Foundation

அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் பொருளை திறந்தபோது தங்கள் கிரயம் தங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு “எங்கள் தந்தையே! நாம் (இதற்கு மேல்) என்ன தேடுகிறோம்? இதோ! நம் கிரய(மு)ம் நம்மிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. (தர்மமும் கிடைத்துள்ளது. ஆகவே புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தருவீராக!) நம் குடும்பத்திற்கு (தேவையான) தானியங்களைக் கொண்டு வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றுவோம். (அவருக்காக) ஓர் ஒட்டகத்தின் அளவையும் அதிகமாக்குவோம். இது (அவருக்கு) ஓர் இலகுவான அளவைதான்”என்று கூறினர்.