Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫௪

Qur'an Surah Yusuf Verse 54

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِيْ بِهٖٓ اَسْتَخْلِصْهُ لِنَفْسِيْۚ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِيْنٌ اَمِيْنٌ (يوسف : ١٢)

waqāla
وَقَالَ
And said
கூறினார்
l-maliku
ٱلْمَلِكُ
the king
அரசர்
i'tūnī
ٱئْتُونِى
"Bring him to me
வாருங்கள்/என்னிடம்
bihi
بِهِۦٓ
"Bring him to me
அவரைக் கொண்டு
astakhliṣ'hu
أَسْتَخْلِصْهُ
I will select him
பிரத்தியேகமாக நான் ஆக்கிக்கொள்வேன்/அவரை
linafsī
لِنَفْسِىۖ
for myself"
எனக்கென மட்டும்
falammā
فَلَمَّا
Then when
போது
kallamahu
كَلَّمَهُۥ
he spoke to him
பேசினார்/அவருடன்
qāla
قَالَ
he said
கூறினார்
innaka
إِنَّكَ
"Indeed, you
நிச்சயமாக நீர்
l-yawma
ٱلْيَوْمَ
(are) today
இன்று
ladaynā
لَدَيْنَا
with us
நம்மிடம்
makīnun
مَكِينٌ
firmly established
தகுதியுடையவர்
amīnun
أَمِينٌ
(and) trusted"
நம்பிக்கையாளர்

Transliteration:

Wa qaalal maliku' toonee biheee astakhlishu linafsee falammaa kallamahoo qaala innakal yawma ladainaa makeenun ameen (QS. Yūsuf:54)

English Sahih International:

And the king said, "Bring him to me; I will appoint him exclusively for myself." And when he spoke to him, he said, "Indeed, you are today established [in position] and trusted." (QS. Yusuf, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

(யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்" என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) "நிச்சயமாக நீங்கள் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்கள்" என்றார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௫௪)

Jan Trust Foundation

இன்னும், அரசர் கூறினார்| “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! நான் அவரை எனக்கென மட்டும் பிரத்தியேகமாக ஆக்கிக்கொள்வேன்”என்று அரசர் கூறினார். (அரசர்) அவருடன் பேசியபோது, “(யூசுஃபே!) நிச்சயமாக நீர் இன்று நம்மிடம் தகுதியுடையவர், நம்பிக்கையாளர்”என்று கூறினார்.