Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫௩

Qur'an Surah Yusuf Verse 53

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَمَآ اُبَرِّئُ نَفْسِيْۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ ۢ بِالسُّوْۤءِ اِلَّا مَا رَحِمَ رَبِّيْۗ اِنَّ رَبِّيْ غَفُوْرٌ رَّحِيْمٌ (يوسف : ١٢)

wamā ubarri-u
وَمَآ أُبَرِّئُ
"And not I absolve
நான் தூய்மைப்படுத்த மாட்டேன்
nafsī
نَفْسِىٓۚ
myself
என் ஆன்மாவை
inna l-nafsa
إِنَّ ٱلنَّفْسَ
Indeed the soul
நிச்சயமாக ஆன்மா
la-ammāratun
لَأَمَّارَةٌۢ
(is) a certain enjoiner
அதிகம் தூண்டக்கூடியதே
bil-sūi illā
بِٱلسُّوٓءِ إِلَّا
of evil unless
பாவத்திற்கு/தவிர
mā raḥima
مَا رَحِمَ
[that] bestows Mercy
எது/அருள்புரிந்தான்
rabbī
رَبِّىٓۚ
my Lord
என் இறைவன்
inna rabbī
إِنَّ رَبِّى
Indeed my Lord
நிச்சயமாக என் இறைவன்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful"
பெரும் கருணையாளன்

Transliteration:

Wa maa ubarri'u nafsee; innan nafsa la ammaaratum bissooo'i illaa maa rahima Rabbee; inna Rabbee Ghafoorur Raheem (QS. Yūsuf:53)

English Sahih International:

And I do not acquit myself. Indeed, the soul is a persistent enjoiner of evil, except those upon which my Lord has mercy. Indeed, my Lord is Forgiving and Merciful." (QS. Yusuf, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, "நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்" என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" (என்றார்.) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௫௩)

Jan Trust Foundation

“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நான் என் ஆன்மாவை தூய்மைப்படுத்த மாட்டேன். (தவறுகளை விட்டு நீங்கியது என்று உயர்வாகப் பேசமாட்டேன்.) என் இறைவன் அருள் புரிந்ததைத் தவிர (மற்ற) ஆன்மா(க்கள் அனைத்தும் மனிதனை) பாவத்திற்கு அதிகம் தூண்டக்கூடியதே. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்”(என்று யூஸுஃப் கூறினார்).