Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨௫

Qur'an Surah Yusuf Verse 25

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَيَا سَيِّدَهَا لَدَا الْبَابِۗ قَالَتْ مَا جَزَاۤءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْۤءًا اِلَّآ اَنْ يُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِيْمٌ (يوسف : ١٢)

wa-is'tabaqā
وَٱسْتَبَقَا
And they both raced
இருவரும் முந்தினர்
l-bāba
ٱلْبَابَ
(to) the door
வாசலிற்கு
waqaddat
وَقَدَّتْ
and she tore
அவள் கிழித்தால்
qamīṣahu
قَمِيصَهُۥ
his shirt
அவருடைய சட்டையை
min duburin
مِن دُبُرٍ
from the back
பின் புறத்திலிருந்து
wa-alfayā
وَأَلْفَيَا
and they both found
இருவரும் பெற்றனர்
sayyidahā
سَيِّدَهَا
her husband
கணவரை அவளுடைய
ladā l-bābi
لَدَا ٱلْبَابِۚ
at the door
வாசலில்
qālat
قَالَتْ
She said
கூறினாள்
mā jazāu
مَا جَزَآءُ
"What (is) the recompense
இல்லை/தண்டனை
man arāda
مَنْ أَرَادَ
(of one) who intended
எவர்/நாடினார்
bi-ahlika
بِأَهْلِكَ
for your wife
உம் மனைவிக்கு
sūan
سُوٓءًا
evil
ஒரு கெட்டதை
illā
إِلَّآ
except
தவிர வேறில்லை
an yus'jana
أَن يُسْجَنَ
that he be imprisoned
அவன் சிறையிடப்படுவது
aw
أَوْ
or
அல்லது
ʿadhābun
عَذَابٌ
a punishment
ஒரு வேதனை
alīmun
أَلِيمٌ
painful?"
துன்புறுத்தக் கூடியது

Transliteration:

Wastabaqal baaba wa qaddat qameesahoo min dubu rinw wa alfayaa saiyidahaa ladal baab; qaalat maa jazaaa'u man araada bi ahlika sooo'an illaaa any-yusjana aw azaabun aleem (QS. Yūsuf:25)

English Sahih International:

And they both raced to the door, and she tore his shirt from the back, and they found her husband at the door. She said, "What is the recompense of one who intended evil for your wife but that he be imprisoned or a painful punishment?" (QS. Yusuf, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறம் கிழிந்துவிட்டது. அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக்கொள்ளக் கருதி) அவரை நோக்கி "உங்களுடைய மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு தண்டனை உண்டா?" என்று கேட்டாள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௨௫)

Jan Trust Foundation

(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இருவரும், வாசலிற்கு முந்தினர். அவள் அவருடைய சட்டையை பின்புறத்தில் கிழித்தால். வாசலில் அவளுடைய கணவரை இருவரும் பெற்றனர்.“உம் மனைவிக்கு ஒரு கெட்டதை நாடியவனின் தண்டனை, அவன் சிறையிடப்படுவது அல்லது (அவனுக்கு) துன்புறுத்தக்கூடிய ஒரு வேதனை (கொடுக்கப்படுவது) தவிர வேறில்லை”என்று கூறினாள்.