Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௩

Qur'an Surah Yusuf Verse 13

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اِنِّيْ لَيَحْزُنُنِيْٓ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ يَّأْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ (يوسف : ١٢)

qāla
قَالَ
He said
கூறினார்
innī
إِنِّى
"Indeed, [I]
நிச்சயமாக நான்
layaḥzununī
لَيَحْزُنُنِىٓ
it surely saddens me
கவலையளிக்கும்/ எனக்கு
an tadhhabū bihi
أَن تَذْهَبُوا۟ بِهِۦ
that you should take him you should take him
நீங்கள்அவரை அழைத்துச் செல்வது
wa-akhāfu
وَأَخَافُ
and I fear
இன்னும் பயப்படுகின்றேன்
an yakulahu
أَن يَأْكُلَهُ
that would eat him
தின்றுவிடுவதை/அவரை
l-dhi'bu
ٱلذِّئْبُ
a wolf
ஓநாய்
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள்
ʿanhu
عَنْهُ
of him
அவரை விட்டு
ghāfilūna
غَٰفِلُونَ
(are) unaware"
கவனமற்றவர்கள்

Transliteration:

Qaala innee la yahzununeee an tazhaboo bihee wa akhaafu anyyaakulahuz zi'bu wa antum 'anhu ghaafiloon (QS. Yūsuf:13)

English Sahih International:

[Jacob] said, "Indeed, it saddens me that you should take him, and I fear that a wolf would eat him while you are of him unaware." (QS. Yusuf, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(அதற்கவர்) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். அன்றி, நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௩)

Jan Trust Foundation

(அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக நான், நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்கு கவலையளிக்கும். நீங்கள் (விளையாட்டில்) அவரை விட்டு கவனமற்றவர்களாக இருக்க, ஓநாய் அவரை தின்றுவிடுவதைப் பயப்படுகிறேன்”என்று கூறினார்.