Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 5

Yusuf

(Yūsuf)

௪௧

يٰصَاحِبَيِ السِّجْنِ اَمَّآ اَحَدُكُمَا فَيَسْقِيْ رَبَّهٗ خَمْرًا ۗوَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ الطَّيْرُ مِنْ رَّأْسِهٖ ۗ قُضِيَ الْاَمْرُ الَّذِيْ فِيْهِ تَسْتَفْتِيٰنِۗ ٤١

yāṣāḥibayi
يَٰصَىٰحِبَىِ
என் இரு தோழர்களே
l-sij'ni
ٱلسِّجْنِ
சிறை
ammā
أَمَّآ
ஆக
aḥadukumā
أَحَدُكُمَا
உங்களிருவரில் ஒருவன்
fayasqī
فَيَسْقِى
புகட்டுவான்
rabbahu
رَبَّهُۥ
தன் எஜமானனுக்கு
khamran
خَمْرًاۖ
மது
wa-ammā
وَأَمَّا
ஆக
l-ākharu
ٱلْءَاخَرُ
மற்றவன்
fayuṣ'labu
فَيُصْلَبُ
கழுமரத்தில் அறையப்படுவான்
fatakulu
فَتَأْكُلُ
தின்னும்
l-ṭayru
ٱلطَّيْرُ
பறவைகள்
min rasihi
مِن رَّأْسِهِۦۚ
அவனுடையதலையில்
quḍiya
قُضِىَ
விதிக்கப்பட்டது
l-amru
ٱلْأَمْرُ
காரியம்
alladhī
ٱلَّذِى
எது
fīhi
فِيهِ
அதில்
tastaftiyāni
تَسْتَفْتِيَانِ
விளக்கம் கேட்கிறீர்கள்
(பின்னும் அவர்களை நோக்கி) "சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) "உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன் முன் செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன் போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானங்கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்" என்று கூறினார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௧)
Tafseer
௪௨

وَقَالَ لِلَّذِيْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِيْ عِنْدَ رَبِّكَۖ فَاَنْسٰىهُ الشَّيْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِى السِّجْنِ بِضْعَ سِنِيْنَ ࣖ ٤٢

waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
lilladhī
لِلَّذِى
எவருக்கு
ẓanna
ظَنَّ
எண்ணினார்
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக எவர்
nājin
نَاجٍ
தப்பிப்பவர்
min'humā
مِّنْهُمَا
அவ்விருவரில்
udh'kur'nī
ٱذْكُرْنِى
நினைவுகூரு/என்னை
ʿinda
عِندَ
இடம்
rabbika
رَبِّكَ
உன் எஜமான்
fa-ansāhu
فَأَنسَىٰهُ
அவருக்கு மறக்கடித்தான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
dhik'ra
ذِكْرَ
நினைவு கூருவதை
rabbihi
رَبِّهِۦ
தன் இறைவனை
falabitha
فَلَبِثَ
ஆகவே தங்கினார்
fī l-sij'ni
فِى ٱلسِّجْنِ
சிறையில்
biḍ'ʿa sinīna
بِضْعَ سِنِينَ
சில ஆண்டுகள்
அன்றி, அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னார். எனினும் (சிறைக்கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான் மறக்கடித்து விட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௨)
Tafseer
௪௩

وَقَالَ الْمَلِكُ اِنِّيْٓ اَرٰى سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ يَّأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍۗ يٰٓاَيُّهَا الْمَلَاُ اَفْتُوْنِيْ فِيْ رُؤْيَايَ اِنْ كُنْتُمْ لِلرُّءْيَا تَعْبُرُوْنَ ٤٣

waqāla
وَقَالَ
கூறினார்
l-maliku
ٱلْمَلِكُ
அரசர்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
arā
أَرَىٰ
கனவில் கண்டேன்
sabʿa
سَبْعَ
ஏழு
baqarātin
بَقَرَٰتٍ
பசுக்கள்
simānin
سِمَانٍ
கொழுத்தவை
yakuluhunna
يَأْكُلُهُنَّ
புசிக்கின்றன/அவற்றை
sabʿun
سَبْعٌ
ஏழு
ʿijāfun
عِجَافٌ
இளைத்தவை
wasabʿa
وَسَبْعَ
இன்னும் ஏழு
sunbulātin
سُنۢبُلَٰتٍ
கதிர்களை
khuḍ'rin
خُضْرٍ
பசுமையானவை
wa-ukhara
وَأُخَرَ
இன்னும் வேறு
yābisātin
يَابِسَٰتٍۖ
காய்ந்தவை
yāayyuhā l-mala-u
يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ
பிரமுகர்களே
aftūnī
أَفْتُونِى
விளக்கம் தாருங்கள்/எனக்கு
fī ru'yāya
فِى رُءْيَٰىَ
என் கனவில்
in kuntum
إِن كُنتُمْ
இருந்தீர்களானால்
lilrru'yā
لِلرُّءْيَا
கனவிற்கு
taʿburūna
تَعْبُرُونَ
வியாக்கியானம் கூறுகிறீர்கள்
(ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) "என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான ஏழு) வேறு கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை அறிவியுங்கள்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௩)
Tafseer
௪௪

قَالُوْٓا اَضْغَاثُ اَحْلَامٍ ۚوَمَا نَحْنُ بِتَأْوِيْلِ الْاَحْلَامِ بِعٰلِمِيْنَ ٤٤

qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
aḍghāthu
أَضْغَٰثُ
பொய்யானவை
aḥlāmin
أَحْلَٰمٍۖ
கனவுகள்
wamā
وَمَا
இல்லை
naḥnu
نَحْنُ
நாங்கள்
bitawīli
بِتَأْوِيلِ
விளக்கத்தை
l-aḥlāmi
ٱلْأَحْلَٰمِ
கனவுகளுக்குரிய
biʿālimīna
بِعَٰلِمِينَ
அறிந்தவர்களாக
அதற்கவர்கள், "இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௪)
Tafseer
௪௫

وَقَالَ الَّذِيْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا۠ اُنَبِّئُكُمْ بِتَأْوِيْلِهٖ فَاَرْسِلُوْنِ ٤٥

waqāla
وَقَالَ
கூறினான்
alladhī
ٱلَّذِى
எவன்
najā
نَجَا
தப்பித்தான்
min'humā
مِنْهُمَا
அவ்விருவரில்
wa-iddakara
وَٱدَّكَرَ
இன்னும் நினைவு கூர்ந்தான்
baʿda ummatin
بَعْدَ أُمَّةٍ
பின்னர்/சில ஆண்டு
anā
أَنَا۠
நான்
unabbi-ukum
أُنَبِّئُكُم
அறிவிப்பேன்/ உங்களுக்கு
bitawīlihi
بِتَأْوِيلِهِۦ
அவருடைய விளக்கத்தை
fa-arsilūni
فَأَرْسِلُونِ
ஆகவே அனுப்புங்கள்/என்னை
(யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக்கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) "அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பி வைத்தார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௫)
Tafseer
௪௬

يُوْسُفُ اَيُّهَا الصِّدِّيْقُ اَفْتِنَا فِيْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ يَّأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍۙ لَّعَلِّيْٓ اَرْجِعُ اِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ ٤٦

yūsufu
يُوسُفُ
யூஸுஃபே!
ayyuhā l-ṣidīqu
أَيُّهَا ٱلصِّدِّيقُ
உண்மையாளரே!
aftinā
أَفْتِنَا
விளக்கம் தருவீராக/எங்களுக்கு
fī sabʿi baqarātin
فِى سَبْعِ بَقَرَٰتٍ
ஏழுபசுக்கள்பற்றியும்
simānin
سِمَانٍ
கொழுத்தவை
yakuluhunna
يَأْكُلُهُنَّ
புசிக்கின்றன/அவற்றை
sabʿun
سَبْعٌ
ஏழு
ʿijāfun
عِجَافٌ
இளைத்தவை
wasabʿi
وَسَبْعِ
இன்னும் ஏழு
sunbulātin
سُنۢبُلَٰتٍ
கதிர்கள்
khuḍ'rin
خُضْرٍ
பசுமையானவை
wa-ukhara
وَأُخَرَ
இன்னும் மற்றவை
yābisātin
يَابِسَٰتٍ
காய்ந்தவை
laʿallī arjiʿu
لَّعَلِّىٓ أَرْجِعُ
நான் திரும்பி செல்லவேண்டும்
ilā l-nāsi
إِلَى ٱلنَّاسِ
மக்களிடம்
laʿallahum yaʿlamūna
لَعَلَّهُمْ يَعْلَمُونَ
அவர்கள் அறியவேண்டும்
(அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி "கனவுகளுக்கு) உண்மை (யான வியாக்கியானம்) கூறுங்கள். யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதனை) நீங்கள் எமக்கு அறிவியுங்கள் (என்னை அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கின்றது" என்று கூறினான். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௬)
Tafseer
௪௭

قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًاۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِيْ سُنْۢبُلِهٖٓ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَأْكُلُوْنَ ٤٧

qāla
قَالَ
கூறினார்
tazraʿūna
تَزْرَعُونَ
விவசாயம்செய்வீர்கள்
sabʿa sinīna
سَبْعَ سِنِينَ
ஏழு ஆண்டுகள்
da-aban
دَأَبًا
வழக்கமாக
famā ḥaṣadttum
فَمَا حَصَدتُّمْ
எதை/அறுவடை செய்தீர்
fadharūhu
فَذَرُوهُ
விட்டு விடுங்கள்/அதை
fī sunbulihi
فِى سُنۢبُلِهِۦٓ
அதன் கதிரிலேயே
illā qalīlan
إِلَّا قَلِيلًا
கொஞ்சத்தை தவிர
mimmā takulūna
مِّمَّا تَأْكُلُونَ
நீங்கள் புசிப்பதற்குத் தேவையான
அதற்கவர் கூறியதாவது: "தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௭)
Tafseer
௪௮

ثُمَّ يَأْتِيْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَّأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِيْلًا مِّمَّا تُحْصِنُوْنَ ٤٨

thumma
ثُمَّ
பிறகு
yatī
يَأْتِى
வரும்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
dhālika sabʿun
ذَٰلِكَ سَبْعٌ
அதற்கு/ஏழு
shidādun
شِدَادٌ
கடினமானவை
yakul'na
يَأْكُلْنَ
அவை தின்னும்
مَا
எவற்றை
qaddamtum
قَدَّمْتُمْ
முற்படுத்தினீர்கள்
lahunna
لَهُنَّ
அவற்றுக்காக
illā qalīlan
إِلَّا قَلِيلًا
கொஞ்சத்தை தவிர
mimmā tuḥ'ṣinūna
مِّمَّا تُحْصِنُونَ
நீங்கள் பத்திரப்படுத்தியதிலிருந்து
அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்த வைகளில் (விதைப்புக்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௮)
Tafseer
௪௯

ثُمَّ يَأْتِيْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِيْهِ يُغَاثُ النَّاسُ وَفِيْهِ يَعْصِرُوْنَ ࣖ ٤٩

thumma
ثُمَّ
பிறகு
yatī
يَأْتِى
வரும்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
dhālika
ذَٰلِكَ
அதற்கு
ʿāmun
عَامٌ
ஓர் ஆண்டு
fīhi
فِيهِ
அதில்
yughāthu
يُغَاثُ
மழை பொழியப்படுவார்(கள்)
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
wafīhi
وَفِيهِ
இன்னும் அதில்
yaʿṣirūna
يَعْصِرُونَ
பிழிவார்கள்
அதற்குப் பின்னர் ஒரு ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிந்துகொண்டு (சுகமாக) இருப்பார்கள்" (என்றும் கூறினார்). ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௯)
Tafseer
௫௦

وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِيْ بِهٖ ۚفَلَمَّا جَاۤءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰى رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِيْ قَطَّعْنَ اَيْدِيَهُنَّ ۗاِنَّ رَبِّيْ بِكَيْدِهِنَّ عَلِيْمٌ ٥٠

waqāla
وَقَالَ
கூறினார்
l-maliku
ٱلْمَلِكُ
அரசர்
i'tūnī
ٱئْتُونِى
வாருங்கள்/என்னிடம்
bihi
بِهِۦۖ
அவரைக் கொண்டு
falammā
فَلَمَّا
வந்த போது
jāahu
جَآءَهُ
வந்த போது அவரிடம்
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதர்
qāla
قَالَ
கூறினார்
ir'jiʿ
ٱرْجِعْ
நீ திரும்பிச் செல்
ilā rabbika
إِلَىٰ رَبِّكَ
உன் எஜமானனிடம்
fasalhu
فَسْـَٔلْهُ
கேள்/அவரை
mā bālu
مَا بَالُ
விஷயமென்ன?
l-nis'wati
ٱلنِّسْوَةِ
பெண்களின்
allātī qaṭṭaʿna
ٱلَّٰتِى قَطَّعْنَ
எவர்கள்/வெட்டினர்
aydiyahunna
أَيْدِيَهُنَّۚ
தங்கள் கைகளை
inna rabbī
إِنَّ رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
bikaydihinna
بِكَيْدِهِنَّ
சூழ்ச்சியை அவர்களின்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் "(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) "நீங்கள் உங்கள் எஜமானனிடம் திரும்பி சென்று, தங்களுடைய கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேளுங்கள். நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௦)
Tafseer