Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௬

Qur'an Surah Hud Verse 6

ஸூரத்து ஹூது [௧௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَمَا مِنْ دَاۤبَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۗ كُلٌّ فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ (هود : ١١)

wamā
وَمَا
And not
இல்லை
min dābbatin
مِن دَآبَّةٍ
any moving creature
எந்த/ஓர் உயிரினம்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
illā
إِلَّا
but
தவிர
ʿalā
عَلَى
on
மீது
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வின்
riz'quhā
رِزْقُهَا
(is) its provision
அதற்கு உணவளிப்பது
wayaʿlamu
وَيَعْلَمُ
And He knows
இன்னும் அறிகின்றான்
mus'taqarrahā
مُسْتَقَرَّهَا
its dwelling place
அவற்றின் தங்குமிடத்தை
wamus'tawdaʿahā
وَمُسْتَوْدَعَهَاۚ
and its place of storage
இன்னும் அவற்றின் அடங்குமிடத்தை
kullun
كُلٌّ
All
எல்லாம்
fī kitābin
فِى كِتَٰبٍ
(is) in a Record
பதிவேட்டில்
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான(து)

Transliteration:

Wa maa min daaabbatin fil ardi illaa 'alal laahi rizquhaa wa ya'lamu mustaqarrahaa wa mustawda'ahaa; kullun fee Kitaabim Mubeen (QS. Hūd:6)

English Sahih International:

And there is no creature on earth but that upon Allah is its provision, and He knows its place of dwelling and place of storage. All is in a clear register. (QS. Hud, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன. (ஸூரத்து ஹூது, வசனம் ௬)

Jan Trust Foundation

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எந்த ஓர் உயிரினமும் பூமியில் இல்லை அதற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருந்தே தவிர. அவற்றின் தங்குமிடத்தையும், (அவை இறந்த பிறகு) அவற்றின் அடங்குமிடத்தையும் அவன் அறிகின்றான். எல்லாம் தெளிவான பதிவேட்டில் (பதிவாகி) உள்ளன.