Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௨௯

Qur'an Surah Hud Verse 29

ஸூரத்து ஹூது [௧௧]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيٰقَوْمِ لَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مَالًاۗ اِنْ اَجْرِيَ اِلَّا عَلَى اللّٰهِ وَمَآ اَنَا۠ بِطَارِدِ الَّذِيْنَ اٰمَنُوْاۗ اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰكِنِّيْٓ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ (هود : ١١)

wayāqawmi
وَيَٰقَوْمِ
And O my people!
என் மக்களே
lā asalukum
لَآ أَسْـَٔلُكُمْ
not I ask (of) you
நான் கேட்கவில்லை/உங்களிடம்
ʿalayhi
عَلَيْهِ
for it
இதன் மீது
mālan
مَالًاۖ
any wealth
ஒரு செல்வத்தை
in ajriya
إِنْ أَجْرِىَ
Not (is) my reward
என் கூலி இல்லை
illā
إِلَّا
except
தவிர
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۚ
from Allah
அல்லாஹ் மீது
wamā anā
وَمَآ أَنَا۠
And not I am
இல்லை / நான்
biṭāridi
بِطَارِدِ
going to drive away
விரட்டுபவனாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்களை
āmanū
ءَامَنُوٓا۟ۚ
believed
நம்பிக்கை கொண்டார்கள்
innahum
إِنَّهُم
Indeed they
நிச்சயமாக அவர்கள்
mulāqū
مُّلَٰقُوا۟
(will) be meeting
சந்திப்பவர்கள்
rabbihim
رَبِّهِمْ
their Lord
தங்கள் இறைவனை
walākinnī
وَلَٰكِنِّىٓ
but I
என்றாலும் நிச்சயமாக நான்
arākum
أَرَىٰكُمْ
see you
காண்கிறேன்/ உங்களை
qawman
قَوْمًا
(are) a people
மக்களாக
tajhalūna
تَجْهَلُونَ
ignorant
நீங்கள் அறிய மாட்டீர்கள்

Transliteration:

Wa yaa qawmi laaa as'alukum 'alaihi maalan in ajriya illaa 'alal laah; wa maaa ana bitaaridil lazeena aamanoo; innahum mulaaqoo Rabbihim wa laakinneee araakum qawman tajhaloon (QS. Hūd:29)

English Sahih International:

And O my people, I ask not of you for it any wealth. My reward is not but from Allah. And I am not one to drive away those who have believed. Indeed, they will meet their Lord, but I see that you are a people behaving ignorantly. (QS. Hud, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

"அன்றி, என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடம் யாதொரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன். (ஸூரத்து ஹூது, வசனம் ௨௯)

Jan Trust Foundation

“அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே ஈமான் கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் மக்களே! இதன் மீது நான் உங்களிடம் செல்வத்தை (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. நம்பிக்கை கொண்டவர்களை விரட்டுபவனாகவும் நான் இல்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்கள் ஆவர். என்றாலும் நிச்சயமாக நான் உங்களை அறியாத மக்களாக காண்கிறேன்.