Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௧

Qur'an Surah Yunus Verse 71

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ نُوْحٍۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَّقَامِيْ وَتَذْكِيْرِيْ بِاٰيٰتِ اللّٰهِ فَعَلَى اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْٓا اَمْرَكُمْ وَشُرَكَاۤءَكُمْ ثُمَّ لَا يَكُنْ اَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْٓا اِلَيَّ وَلَا تُنْظِرُوْنِ (يونس : ١٠)

wa-ut'lu
وَٱتْلُ
And recite
ஓதுவீராக
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்களுக்கு
naba-a
نَبَأَ
the news
சரித்திரத்தை
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
idh qāla
إِذْ قَالَ
when he said
சமயத்தை/அவர்கள் கூறினார்
liqawmihi
لِقَوْمِهِۦ
to his people
தன் சமுதாயத்தை நோக்கி
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் சமுதாயமே
in kāna
إِن كَانَ
If is
இருந்தால்
kabura
كَبُرَ
hard
பாரமாக
ʿalaykum
عَلَيْكُم
on you
உங்கள் மீது
maqāmī
مَّقَامِى
my stay
நான் தங்குவது
watadhkīrī
وَتَذْكِيرِى
and my reminding
இன்னும் நான்உபதேசிப்பது
biāyāti
بِـَٔايَٰتِ
the Signs of Allah
வசனங்களைக் கொண்டு
l-lahi
ٱللَّهِ
the Signs of Allah
அல்லாஹ்வின்
faʿalā l-lahi
فَعَلَى ٱللَّهِ
then on Allah
மீது/அல்லாஹ்
tawakkaltu
تَوَكَّلْتُ
I put my trust
நான் நம்பிக்கை வைத்தேன்
fa-ajmiʿū
فَأَجْمِعُوٓا۟
So you all resolve
ஆகவேமுடிவுசெய்யுங்கள்
amrakum
أَمْرَكُمْ
your plan
காரியத்தை உங்கள்
washurakāakum
وَشُرَكَآءَكُمْ
and your partners
இன்னும் இணை தெய்வங்களை உங்கள்
thumma
ثُمَّ
Then
பிறகு
lā yakun
لَا يَكُنْ
let not be let not be
ஆகிவிடவேண்டாம்
amrukum
أَمْرُكُمْ
(in) your plan
காரியம் உங்கள்
ʿalaykum
عَلَيْكُمْ
for you
உங்கள் மீது
ghummatan
غُمَّةً
any doubt
குழப்பமானதாக
thumma
ثُمَّ
Then
பிறகு
iq'ḍū
ٱقْضُوٓا۟
carry (it out)
நிறைவேற்றுங்கள்
ilayya
إِلَىَّ
upon me
என் பக்கம்
walā tunẓirūni
وَلَا تُنظِرُونِ
and (do) not give me respite
நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு

Transliteration:

Watlu 'alaihim naba-a-Noohin iz qaala liqawmihee yaa qawmi in kaana kabura 'alaikum maqaamee wa tazkeeree bi Aayaatil laahi fa'alal laahi tawakkaltu fa ajmi'ooo amrakum wa shurakaaa'akum summa laa yakun amrukum 'alaikum ghummatan summmaq dooo ilaiya wa laa tunziroon (QS. al-Yūnus:71)

English Sahih International:

And recite to them the news of Noah, when he said to his people, "O my people, if my residence and my reminding of the signs of Allah has become burdensome upon you – then I have relied upon Allah. So resolve upon your plan and [call upon] your associates. Then let not your plan be obscure to you. Then carry it out upon me and do not give me respite. (QS. Yunus, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். அவர் தன் மக்களை நோக்கி, "என்னுடைய மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதினால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக்கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின்படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் தாமதிக்க வேண்டாம்" என்று கூறினார். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭௧)

Jan Trust Foundation

மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதுவீராக! அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே! (உங்களுடன்) நான் தங்குவதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். ஆகவே, உங்கள் காரியத்தை முடிவுசெய்யுங்கள்; உங்கள் இணைதெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்); பிறகு, உங்கள் காரியம் உங்கள் மீது குழப்பமானதாக ஆகிவிடவேண்டாம். பிறகு, என் பக்கம் (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். (இதில்) நீங்கள் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.