Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௪

Qur'an Surah Yunus Verse 54

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِى الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖۗ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَۚ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ (يونس : ١٠)

walaw anna
وَلَوْ أَنَّ
And if that
இருந்தால்
likulli nafsin
لِكُلِّ نَفْسٍ
for every soul
ஒவ்வோர் ஆன்மாவிற்கும்
ẓalamat
ظَلَمَتْ
(that) wronged
அநியாயம் செய்தது
mā fī l-arḍi
مَا فِى ٱلْأَرْضِ
whatever (is) in the earth
எவை/பூமியில்
la-if'tadat
لَٱفْتَدَتْ
it (would) seek to ransom
பரிகாரமாகக் கொடுத்துவிடும்
bihi
بِهِۦۗ
with it
அவற்றை
wa-asarrū
وَأَسَرُّوا۟
and they (will) confide
இன்னும் மறைத்துக் கொள்வார்கள்
l-nadāmata
ٱلنَّدَامَةَ
the regret
துக்கத்தை
lammā ra-awū
لَمَّا رَأَوُا۟
when they see
போது/அவர்கள் கண்டனர்
l-ʿadhāba
ٱلْعَذَابَۖ
the punishment
வேதனையை
waquḍiya
وَقُضِىَ
But will be judged
இன்னும் தீர்ப்பளிக்கப்பட்டது
baynahum
بَيْنَهُم
between them
அவர்களுக்கு மத்தியில்
bil-qis'ṭi wahum
بِٱلْقِسْطِۚ وَهُمْ
in justice and they
நீதமாக/அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
(will) not (be) wronged
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

Transliteration:

Wa law anna likulli nafsin zalamat maa fil ardi laftadat bih; wa asarrun nadaamata lammaa ra awul 'azaab, wa qudiya bainahum bilqist; wa hum laa yuzlamoon (QS. al-Yūnus:54)

English Sahih International:

And if each soul that wronged had everything on earth, it would offer it in ransom. And they will confide regret when they see the punishment; and they will be judged in justice, and they will not be wronged. (QS. Yunus, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

நம்முடைய வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் அநியாயம் செய்த ஒவ்வொரு ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்து விடக் கருதும்! தவிர, தன்னுடைய துக்கத்தை மறைத்துக்கொள்ளவும் கருதும். (அந்நாளில்) அவைகளுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவை அநியாயம் செய்யப்பட மாட்டாது. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௫௪)

Jan Trust Foundation

(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அநியாயம் செய்த ஒவ்வோர் ஆன்மாவிற்கும் பூமியில் உள்ளவை (அனைத்தும் சொந்தமாக) இருந்தால் அவற்றை அது பரிகாரமாகக் கொடுத்துவிடும்! அவர்கள் வேதனையைக் காணும்போது துக்கத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும்; அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.