Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௫

Qur'an Surah Yunus Verse 35

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ هَلْ مِنْ شُرَكَاۤىِٕكُمْ مَّنْ يَّهْدِيْٓ اِلَى الْحَقِّۗ قُلِ اللّٰهُ يَهْدِيْ لِلْحَقِّۗ اَفَمَنْ يَّهْدِيْٓ اِلَى الْحَقِّ اَحَقُّ اَنْ يُّتَّبَعَ اَمَّنْ لَّا يَهِدِّيْٓ اِلَّآ اَنْ يُّهْدٰىۚ فَمَا لَكُمْۗ كَيْفَ تَحْكُمُوْنَ (يونس : ١٠)

qul
قُلْ
Say
கூறுவீராக
hal min
هَلْ مِن
"Is (there) of
?/இருந்து
shurakāikum
شُرَكَآئِكُم
your partners
இணை(தெய்வங்)கள்/உங்கள்
man
مَّن
(any) who
எவர்
yahdī
يَهْدِىٓ
guides
நேர்வழி காட்டுவார்
ilā
إِلَى
to
பக்கம்
l-ḥaqi
ٱلْحَقِّۚ
the truth?"
சத்தியம்
quli
قُلِ
Say
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
"Allah
அல்லாஹ்
yahdī
يَهْدِى
guides
நேர்வழி காட்டுகிறான்
lil'ḥaqqi
لِلْحَقِّۗ
to the truth
சத்தியத்திற்கு
afaman
أَفَمَن
Is then (he) who
ஆகவே எவர்?
yahdī
يَهْدِىٓ
guides
நேர்வழி காட்டுவான்
ilā l-ḥaqi
إِلَى ٱلْحَقِّ
to the truth
பக்கம்/சத்தியத்தின்
aḥaqqu
أَحَقُّ
more worthy
மிகத் தகுதியானவனா
an yuttabaʿa
أَن يُتَّبَعَ
that he should be followed
பின்பற்றப்படுவதற்கு
amman
أَمَّن
or (he) who
அல்லது/எவர்
lā yahiddī
لَّا يَهِدِّىٓ
(does) not guide
நேர்வழி அடைய மாட்டான்
illā
إِلَّآ
unless
தவிர
an yuh'dā
أَن يُهْدَىٰۖ
[that] he is guided?
அவர் நேர்வழி காட்டப்படுவார்
famā
فَمَا
Then what
என்ன?
lakum
لَكُمْ
(is) for you
உங்களுக்கு
kayfa
كَيْفَ
how
எவ்வாறு?
taḥkumūna
تَحْكُمُونَ
you judge?"
நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்

Transliteration:

Qul hal min shurakaaa 'ikum mai yahdeee ilal haqq; qulil laahu yahdee lilhaqq; afamai yahdeee ilal haqqi ahaqqu ai yuttaba'a ammal laa yahiddeee illaaa ai yuhdaa famaa lakum kaifa tahkumoon (QS. al-Yūnus:35)

English Sahih International:

Say, "Are there of your 'partners' any who guides to the truth?" Say, "Allah guides to the truth. So is He who guides to the truth more worthy to be followed or he who guides not unless he is guided? Then what is [wrong] with you – how do you judge?" (QS. Yunus, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்றும் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்" (என்று கூறி) "நேரான வழியில் செலுத்தக் கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்" என்றும் நீங்கள் கேளுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩௫)

Jan Trust Foundation

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக; அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவர் உங்கள் இணை தெய்வங்களில் யாரும் உண்டா?” என்று கூறுவீராக! “அல்லாஹ்தான் சத்தியத்திற்கு நேர்வழி காட்டுகிறான். சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவன் பின்பற்றப்படுவதற்கு மிகத் தகுதியானவனா? அல்லது தான் நேர்வழி காட்டப்பட்டால் தவிர நேர்வழியடைய மாட்டாதவ(ன் பின்பற்ற தகுதியனவ)னா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்”என்று (நபியே) கூறுவீராக!