Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௯

Qur'an Surah Yunus Verse 19

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا كَانَ النَّاسُ اِلَّآ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْاۗ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِيْمَا فِيْهِ يَخْتَلِفُوْنَ (يونس : ١٠)

wamā kāna
وَمَا كَانَ
And not was
இருக்கவில்லை
l-nāsu
ٱلنَّاسُ
the mankind
மனிதர்கள்
illā
إِلَّآ
but
தவிர
ummatan
أُمَّةً
a community
ஒரு சமுதாயமாக
wāḥidatan
وَٰحِدَةً
one
ஒரே
fa-ikh'talafū
فَٱخْتَلَفُوا۟ۚ
then they differed
பிறகு மாறுபட்டனர்
walawlā
وَلَوْلَا
And had (it) not been
இருக்கவில்லையெனில்
kalimatun
كَلِمَةٌ
a word
சொல்
sabaqat
سَبَقَتْ
(that) preceded
முந்தியது
min rabbika
مِن رَّبِّكَ
from your Lord
உம் இறைவனின்
laquḍiya
لَقُضِىَ
surely, it (would) have been judged
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
baynahum
بَيْنَهُمْ
between them
அவர்களுக்கிடையில் எவற்றில்
fīmā
فِيمَا
concerning what
அவற்றில்
fīhi
فِيهِ
[therein]
மாறுபடுகின்றனர்
yakhtalifūna
يَخْتَلِفُونَ
they differ
Err

Transliteration:

Wa maa kaanan naasu illaaa ummmatanw waahidatan fakh talafoo; wa law laa kalimatun sabaqat mir Rabbika laqudiya bainahum fee maa feehi yakhtalifoon (QS. al-Yūnus:19)

English Sahih International:

And mankind was not but one community [united in religion], but [then] they differed. And if not for a word that preceded from your Lord, it would have been judged between them [immediately] concerning that over which they differ. (QS. Yunus, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பினராக இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பல வகுப்பினராகப்) பிரிந்து விட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று நபியே!) உங்களது இறைவனின் வாக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்கள் மாறுபாடு செய்து கொண்டிருந்த விஷயத்தில் அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிவு பெற்றே இருக்கும்! (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௯)

Jan Trust Foundation

மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதர்கள் (அனைவரும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு சமுதாயமாகவே தவிர இருக்கவில்லை. பிறகு (பொறாமையினால் தங்களுக்குள்) மாறுபட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் என்ற) உம் இறைவனின் சொல் முந்தியிருக்கவில்லையெனில், (அவர்கள்) மாறுபடுகின்றவற்றில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்!