Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௦௧

Qur'an Surah Yunus Verse 101

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلِ انْظُرُوْا مَاذَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۗوَمَا تُغْنِى الْاٰيٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ (يونس : ١٠)

quli
قُلِ
Say
கூறுவீராக
unẓurū
ٱنظُرُوا۟
"See
கவனியுங்கள்
mādhā
مَاذَا
what
எதை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
(is) in the heavens
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth"
இன்னும் பூமியில்
wamā tugh'nī
وَمَا تُغْنِى
But not will avail
பலனளிக்கமாட்டார்கள்
l-āyātu
ٱلْءَايَٰتُ
the Signs
வசனங்கள்
wal-nudhuru
وَٱلنُّذُرُ
and the warners
இன்னும் எச்சரிப்பவர்கள்
ʿan qawmin
عَن قَوْمٍ
to a people
சமுதாயத்திற்கு
lā yu'minūna
لَّا يُؤْمِنُونَ
(who do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Qulin zuroo maazaa fissamaawaati wal ard; wa maa tughnil Aayaatu wannuzuru 'an qawmil laa yu'minoon (QS. al-Yūnus:101)

English Sahih International:

Say, "Observe what is in the heavens and the earth." But of no avail will be signs or warners to a people who do not believe. (QS. Yunus, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை (சிறிது) கவனித்துப் பாருங்கள்" எனக் கூறுங்கள். எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம்முடைய வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் யாதொரு பயனுமளிக்காது. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

“வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! “வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை கவனியுங்கள். நம்பிக்கை கொள்ளாத சமுதாயத்திற்கு வசனங்களும், எச்சரிப்பவர்களும் பலனளிக்க மாட்டார்கள்.”